நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தகுதியற்ற தார்மீகம்!



நேசிக்கத்தான் நினைக்கிறது
ஆனால்
நிலைதவறிய தந்தையை
நேசிப்பதற்கே தெரியாமல்!

அன்பு பாராட்டத்தான் துடிக்கிறது
ஆனால்
அரவணைக்க தகுதியற்ற தந்தையை
அன்புகொள்ளவே முடியாமல்!

உறவென சொல்லதான் தவிக்கிறது
ஆனால்
வெறுத்தொதிக்கி சென்ற தந்தையை
உறவுக்கொள்ள மனம் ஏற்காமல்!

தார்மீக பொறுப்பற்று
கட்டியவளை தண்டிப்பதாயெண்ணி
பெற்ற குழந்தைகளையும் தண்டிப்போருக்கு
தந்தையர்களென்ற
மகத்துவத்துக்கு தகுதியில்லை!

குழந்தைகளின் மனங்களை
கொலைசெய்துவிட்டு              
குடும்பத் தலைவனென
கொக்கரிக்கும் சில தறுதலை[தந்தை]கள்!

கோடாரியாய் தான்மாறி
குடும்பவேரை சாய்த்துவிட்டு
தான்மட்டும் நிம்மதிதேடும்
தன்னலவாத பச்சோந்திகள்

இல்லையில்லை
மனக்கொலைகள் புரிந்துகொண்டு
மகத்தானாவனென சொல்லித்திரியும்
மன்னிக்கமுடியா தீவிரவாதிகள்....


டிஸ்கி// இது கவிதையல்ல, திருமணமணமுடித்து,கருகொடுத்து உருவந்தபின், கனவுகள் கலைந்ததுபோல் காணாமல் போகும், சிலது கூடயிருந்தே பிரயோசனமற்று வாழும்,  தறுதலை[தந்தை]களின் உண்மைநிலை!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. யாருக்கு...

    இந்தச் சவுக்கடி...

    சரியானச் சவுக்கடி கவிஞரே...

    “தந்தை”களில்
    சில தெய்வமும் உண்டு...
    சில சைத்தான்களும் உண்டு...

    இதில்...
    என் தந்தை
    “தெய்வத்துள் வைக்கப்படுவர்”என
    வள்ளுவன் வாய்மொழிப்படி

    தெய்வமாய் வாழ்ந்து...
    தெய்வமாய் மறைந்தவர்... என் நினைவில்,
    தெய்வமாய் வசிப்பவர் என்றும்...

    கவிதையில்
    மனதின் கோவம், ஆத்திரம்
    வடித்த
    வரிகளில்
    வடிகிறது..

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி..

    பதிலளிநீக்கு
  3. யாருக்கு...

    இந்தச் சவுக்கடி...

    சரியானச் சவுக்கடி கவிஞரே...

    “தந்தை”களில்
    சில தெய்வமும் உண்டு...
    சில சைத்தான்களும் உண்டு...

    இதில்...
    என் தந்தை
    “தெய்வத்துள் வைக்கப்படுவர்”என
    வள்ளுவன் வாய்மொழிப்படி

    தெய்வமாய் வாழ்ந்து...
    தெய்வமாய் மறைந்தவர்... என் நினைவில்,
    தெய்வமாய் வசிப்பவர் என்றும்...

    கவிதையில்
    மனதின் கோவம், ஆத்திரம்
    வடித்த
    வரிகளில்
    வடிகிறது..

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி..

    பதிலளிநீக்கு
  4. வரிகள் விலாசியிருக்கின்றன.
    பெயர்தாங்கியாய் இங்கும் சில உலாவருகின்றன மல்லி.

    என்னசொல்ல சொல்லியும் பயனென்ன.
    ஜீவனற்ற மனிதர்கள்..

    பாராட்டுகிறேன் பிற மனஉணர்வுகளையும் உள்வாங்குகிறாய்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது