நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிருடல்காக்கும் உழைப்பு.



ஏழை உழைப்பாளார்கள்

உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-
ஏனோ அவர்களின் 

ஊதியம் மட்டும் மிஞ்சுவதேயில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்

மிஞ்சும் காசுக்கு தேய்ந்த உடலை 
தே[ற்ற]த்தக் கூட முடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-
அவர்கள்
உடலின் ஒவ்வொரு
எலும்பிலும்
ஏக்கம் தெரியும்

எத்தனை உழைத்தபோதும் -இந்த

எலும்புகள் மட்டுமே

எஞ்சி மிஞ்சுகிறதேயென!


கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்

கஷ்டம் தெரியும்போது

கடும் உழைப்பும்

கஷ்டமாக தெரியாதாம்.


உழைப்பவர்களுக்கு
அவர்களின்  வியர்வை

உலர்ந்து விடுவதற்குள்

ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


உழைப்பாளிகள்
உழைப்பை உதாசினம் 
செய்யாதீர்கள்
ஏழை வியாபரிகளிடம்
அநியாய பேரம் பேசாதீர்கள்.. 
 

வாழ்த்துக்கள் சொல்வதோடு

நின்றுவிடாமல் –அவர்கள்

வாழவும் வழிவகுத்துக் கொடுக்க

வாஞ்சையோடு உதவுங்கள்..


உலகிலுள்ள அனைத்து உழைப்பாளர்களுக்கும்
எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் ..



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம்

2 கருத்துகள்:

  1. உன்னத வரிகள்... உண்மை வரிகள்...

    என்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    பதிலளிநீக்கு
  2. அருமையாக சொல்லியிருக்கிறீங்க சகோதரி....
    வாழ்த்துக்கள் உரைப்பதோடு மட்டுமல்லாது
    அவர்களின் உழைப்பினை உன்னதமாக்க வேண்டும்....
    ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது