நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பார்வையின் பதியல்

svr.pamini 



புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது

உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது

உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது

பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது

பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
 இமையசைக்காது இருவிழிகளை
 நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

  1. CLEAR PERCEPTION
    என்று சொல்வார்கள்..
    அதுபோல.. நேர்கொண்ட பார்வையில் இருக்கும்
    சக்திக்கு அளவே இல்லை..
    அழகான கவிதை சகோதரி..

    பதிலளிநீக்கு
  2. சக்கிலா சந்திரன்.18 ஏப்ரல், 2012 அன்று PM 1:19

    அந்தபார்வையில் சிக்கி சீரழிந்தவர்களும் உண்டு
    சிறப்பாய் வாழ்பவர்களும் உண்டு

    உன் கவி நன்றிலும் நன்று,

    அது சரி யார் பார்வையில் சிக்கினாய். உண்மை ரகசியம் அதை இங்கே சொல்லாதே ஹா ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.ஏள்ளா என்னிடம் மட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பறக்கும் திறனையும்
    மிதக்கும் திறனையும்
    கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
    இமையசைக்காது இருவிழிகளை
    நேர்நோக்கி சொக்கவைக்கும்
    பார்வைக்குதான் உண்டு!

    உண்மைதானுங்கோ. எப்படியெல்லாம் சுத்தியிருக்கோம் இந்தபார்வையால..

    அழகா எழுதுறீங்க உங்க ஆசான் யாருங்க..

    பதிலளிநீக்கு
  4. பார்வையின் பதியல் உங்கள் எழுதில் எங்கள் மனதில் பசுமரத்தாணீயாய் பதிகிறது. எப்படிங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க. நீங்க சகலகலா வல்லியா? எங்கோ படித்த நியாபகம். நீங்க 4 வெப் கலை மற்றும் கவிதை கலக்குறீங்க போங்க மேலும் வளர வாழ்த்துகள்..

    என்றும் நட்புடன்
    ரஹ்மான்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது