நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓய்வு கேட்க்கும் கனவு.




கனவுக்கும் உணர்வுண்டு
கண்களைவிட்டுச் செல்லாதே!

காண்பதெல்லாம் கனவென்று
கண்களும் சொல்லாதே!

விழிகள் விழித்திருக்க
வெருங்கனவு காணாதே!

வெளிச்சத்தை விட்டு விட்டு
வேறொரு இருளுக்குள் போகாதே!

கனவுகள் மெய்படும்வரை
காட்சிகளும் நகராதே!

கனவுகள் தேயும்வரை
கருவிழியும் சடைக்காதே!

காலங்கள் தீரும்வரை
கனவுகள் ஓயாதே!

கனவுகளும் ஓயாதே
கல்லறைக்கு போகும்வரை.........

இக்கவிதை முதுகுளத்தூர்.காமில் வெளிவந்துள்ளது..
நன்றி முதுகுளத்தூர்.காம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

11 கருத்துகள்:

  1. வார்த்தையில்லை சகோதரி
    அப்படி ஒரு சொல்லாற்றல் கவிதையில்.
    கனவிலும் நினைத்திராத
    அழகிய கனவுக் கவிதை.
    கவின்மிகு வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஓயாத கனவுகள்
    சாயாத நினைவுகளில்
    சோராமல் கிளர்ந்தெழும்
    எழுச்சிகள்.
    அருமையான படைப்பு.

    பதிலளிநீக்கு
  3. arumaiyaana sinthanai malikka.
    superrrrrrrrrrrrrrrrr

    பதிலளிநீக்கு
  4. கனவுகள் தேவை மல்லிக்கா.அப்போதான் வாழ்வில் பிடிப்பும் சுவாரஸ்யமும் !

    பதிலளிநீக்கு
  5. வரிகளில் விளையாடி மேன்மையான படைப்பை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ ...

    பதிலளிநீக்கு
  6. ஹேமா கனவல்லவா ஓய்வு கேட்பதாக சொல்லப்பட்டிருக்கு கவிதையில். மலிக்கா கனவுக்கு ஓய்வுகொடுக்கசொல்லவில்லையென நினைக்கிறேன் சரியா மலிக்கா

    ஆனால் கவிதை வெகு அருமை

    பதிலளிநீக்கு
  7. ///காலங்கள் தீரும்வரை
    கனவுகள் ஓயாதே!
    கனவுகளும் ஓயாதே
    கல்லரைக்கு (கல்லறைக்கு) போகும்வரை.........////

    நல்ல வரிகள்....!
    கவிதையும் அருமை...!

    "எனது
    கனவுகளில்
    கல்லெறிந்துவிட்டு...
    காணாமற் போனவளே...!" என்று ஓர் கவிதையிலும்

    "கனவுகளுக்கு
    கல்லறை எழுப்பிவிட்டு
    நனவுலகில்
    நடக்க ஆரம்பித்தேன்...!
    விடவில்லை
    விதி..
    மீண்டும்
    கனவுகளைக்
    காட்டி தடை செய்கிறது...!" என இன்னோர் கவிதையிலும்

    "கனவுகள்" பற்றி ஒருத்தர் எழுதியுள்ளார்....!

    ஹி... ஹி... ஹி...!

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும்...
    எல்லாமும்
    இவ்வாண்டு அளவோடு பெற்று...!
    நலமோடும்...!
    வளமோடும்....! வாழ்க...! என்ற
    வாழ்த்துக்களுடன்....

    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்...!

    "என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"....!

    பதிலளிநீக்கு
  9. காலங்கள் தீரும்வரை கனவுகள் தீராது. கனவுகளைக் கைவிட்டால் எமக்கு உயர்வேது--? அருமை தங்கச்சி. உனக்கும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புது ஆண்டு உங்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. எனது தளம் வந்து
    எனது எண்ணங்களை உணர்ந்து
    எனது உணர்வை புரிந்த
    ஆருயிர் நெஞ்சங்களின் அன்பான கருத்துகள் அத்தனைக்கும் ஆழ்மன உணர்விலிருந்து ஆத்மார்த்தான நன்றிகள்..

    அனைவரும் தொடர்ந்துவந்து ஊக்கமெனும் அன்புகருத்துகளை பகிருமாறு அன்போடு வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது