நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுடாமல் சுடுதே!.

 சூடா ஒரு டம்ளர்  டீ கிடைக்குமா? என்னது டீயாஆஆஆஆஆஆஆஆஆஆஅ


இனி அடிக்கடியென்ன ஒருகடிக்கூட டீக்குடிக்க யோசிக்கனுமோ???? 

 [”அம்மா பால்”. ”போப்பா வாரம் ஒருதரம் வந்தாபோதும் போயிட்டுவா].
அடிய்யே தங்கப்பொண்ணு டீயா போட்டிருக்கே தலைய வலிக்கிறமாதரியிருக்கு ஒரு கப்பில் கொஞ்சம் தருகிறாயா இதோ வாரேன்..]


ஆகாகா இனி பக்கத்துல போகிற  பஸ்ஸை பாக்குறத்துக்கும் யோசிக்கனுமோ????


[பஸ்ஸில் ஏறினா நிக்கிறவங்களுக்கு அதே காசுதான்! உக்காந்துள்ளவங்களுக்கும் அதேகாசுதான்! அப்ப இனி பாக்குறவங்களுக்கும் கேப்பாங்களோன்னுதேன் அதுவும் டபுல்மடங்கில்]


அதைவிட இனி பதிவுபோடக்கூட யோசியோ யோசின்னு யோசிக்கனுமோ????


பின்ன பில் எலக்டிக் பில் எகிரிடுமாமே அப்ப பதிவுபோட கணினிக்கும் கரண்ட் தேவை அதை ஆப்ரேட் பண்ணுகிற நம்ம கண்ணுக்கு வெளிச்சவேணுமுன்ன ஒரு லைட் தேவை அப்போ டபுள் டிபுளாகிடுமேன்னுதாங்கோ!..
-----------------------------------------------------------------
அடடா எப்படியெல்லாம் சோதனை சுத்தி சுத்தி அடிக்குது
இதெல்லாம் நீ ஊருக்குள் வந்ததால்தானா. அதுசரி..
“ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா இப்ப பாரு இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு.”
ஹூம் இன்னும் என்னனமோ நடக்குமோ தெரியலையே!சரி சரி எப்போ போறே!
விஷா ரெடியாச்சா இல்லயா? கெளம்பு கெளம்பு நீ ஊருக்கு வந்திருந்ததுபோதும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

20 கருத்துகள்:

  1. இனிமே அமலா பால் அவரோட சம்பளத்தை டபுள் மடங்கா உயர்த்திடுவார்...

    பதிலளிநீக்கு
  2. பஸ்ஸில போறதுக்குப் பதிலா நடை. காபீ, டீக்குப் பதிலா அருகம்புல் ஜுஸ். கரண்ட்டை யூஸ் பண்ணாம மெழுகுவர்த்தி. எவ்வளவு சுலபமா நம்மை ‘அம்மா’ சரித்திரகாலத் தமிழனக்கிட்டாங்க. இதப் புரிஞ்சுக்கிட்டு யாருமே பாராட்ட மாட்டேங்கறாங்கம்மா அவங்களை...!

    பதிலளிநீக்கு
  3. Philosophy Prabhakaran கூறியது...

    இனிமே அமலா பால் அவரோட சம்பளத்தை டபுள் மடங்கா உயர்த்திடுவார்...//

    அடடா அந்த கவலை வந்துடுச்சா உங்களுக்கு. அதுவும் சரிதான் அவங்களும் யின்னாப்பண்ணுவாங்க..அவுகளபாக்குற நீங்களும் யின்னாப்பண்ணூவீங்க பாவந்தேன் ரெண்டுபேரும்.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா இப்ப பாரு இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு.”//அதானம்மா மல்லி ..நீங்க அங்கயே இருந்திருக்கணும்...

    பதிலளிநீக்கு
  5. ஸாதிகா கூறியது...

    ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா இப்ப பாரு இங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு.”//அதானம்மா மல்லி ..நீங்க அங்கயே இருந்திருக்கணும்...//

    அதுக்குத்தான்க்கா மச்சான் அப்பவே சொல்லிச்சி போனா உடனே திரும்பிடனும் இப்படியெல்லாம்போய் ஒரேடியா இருந்து மத்தவாளுக்கு தொந்தரவு கொடுக்ககூடாதுன்னு.. ஆசை யாராவிட்டது. தாய்மண்ணே மகிழ்ச்சின்னு ஓடோடிவந்து நான் திரும்ப மனசில்லாம இருந்ததால வந்த வினையோ அச்சோஓஓஓஓஓஓஓஓஓ

    பதிலளிநீக்கு
  6. கணேஷ் கூறியது...

    பஸ்ஸில போறதுக்குப் பதிலா நடை. காபீ, டீக்குப் பதிலா அருகம்புல் ஜுஸ். கரண்ட்டை யூஸ் பண்ணாம மெழுகுவர்த்தி. எவ்வளவு சுலபமா நம்மை ‘அம்மா’ சரித்திரகாலத் தமிழனக்கிட்டாங்க. இதப் புரிஞ்சுக்கிட்டு யாருமே பாராட்ட மாட்டேங்கறாங்கம்மா அவங்களை...!//

    அதானே கணேஷண்ணா!
    பாராட்டாம ஏன் எல்லாரும் பொற்கொடி சே போர்கொடி தூக்குறாங்க. இனி நடராஜா சர்வீஸ் அருகம்புல் ஆப்பிள் ஜூஸ். மெழுகுவர்த்தி ஒளியின் வழியே பேனேவின் வழியும் இங்கோடு புறப்படும் கவிதை.
    அடடா கேட்கவே சூப்பராயிருக்கே.

    யாருப்பா அது இதையெல்லாமேணாமுன்னு சொல்லுறது.

    வேணுமுன்னு சொல்லுறவங்க ஒருபக்கமும் இதெல்லாம் யாருக்கு வேணும்
    வேணவே வேணானுனு சொல்லுறவங்க மறுபுறமும் நின்னு
    இடையில் இருக்கு கயித்த இருபக்கமுமும் இழுங்க யாரு செயிக்கிறான்னு பார்ப்போம்.


    அப்ப நீங்களெல்லாம் யாருன்னு எந்தபக்கமுன்னு கேட்கக்கூடாது சொல்லிபுட்டேன்..

    பதிலளிநீக்கு
  7. கரண்ட்டை யூஸ் பண்ணாம மெழுகுவர்த்தி. //கணேஷ்ண்ணா..அப்ப எப்படி பதிவெழுதறதாம்?

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் உயரும் ... சராசரி மனிதனின் சம்பளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு ...

    பதிலளிநீக்கு
  9. ஆமா ஸாதிகா தங்கச்சி... பதிவெழுதறதுக்கு கரண்ட் வேணும்கறத மறந்துட்டனே... அதுக்கு மட்டும் கரண்ட் செலவு பண்ணிக்குவம்னா... மத்தவங்க எழுதறதப் படிக்கறதுக்கும் கரண்ட் வேணுமே... என்னடா இது எமக்கு வந்த சோதனை!

    பதிலளிநீக்கு
  10. அசத்தலான பதிவு மல்லி கரெக்ட் டைமிங்கல போட்டு அசத்தியாச்சி நேத்து 3 ரூ.கொடுத்து போன இடத்துக்கு இன்றைக்கு 7 ரூ.

    பதிலளிநீக்கு
  11. அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    என்றழக்காத ஜீவனில்லையே
    இப்போ அம்மாவை திட்டாத
    மனிதரில்லையே
    நேரில் போயி
    நின்னுகிட்டு
    நல்ல நாலு கேள்வியா கேட்டகனுங்கோஓ

    தக்க சமயத்தில் சூப்பர் பதிவுங்கோ

    பதிலளிநீக்கு
  12. ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா

    மல்லி துபாய்ல இருந்துட்டாமட்டு இங்க விலை வாசில்லாம் இறங்கிடுமோ?

    பதிலளிநீக்கு
  13. அரசன் கூறியது...

    எல்லாம் உயரும் ... சராசரி மனிதனின் சம்பளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு ..//

    அத உயர்த்திட்டா ஏனிந்த போர்கொடி போராட்டமெல்லாம்..

    பதிலளிநீக்கு
  14. கணேஷ் கூறியது...

    ஆமா ஸாதிகா தங்கச்சி... பதிவெழுதறதுக்கு கரண்ட் வேணும்கறத மறந்துட்டனே... அதுக்கு மட்டும் கரண்ட் செலவு பண்ணிக்குவம்னா... மத்தவங்க எழுதறதப் படிக்கறதுக்கும் கரண்ட் வேணுமே... என்னடா இது எமக்கு வந்த சோதனை!//

    கணேஷண்ணா மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மொத்ததையும் மறந்துட்டாங்கபோல..

    சோதனை இனி ரவுண்ட் கட்டி அடிக்குமோ!!!!!!!!!1

    பதிலளிநீக்கு
  15. சாருஸ்ரீராஜ் கூறியது...

    அசத்தலான பதிவு மல்லி கரெக்ட் டைமிங்கல போட்டு அசத்தியாச்சி நேத்து 3 ரூ.கொடுத்து போன இடத்துக்கு இன்றைக்கு 7 ரூ.//

    வாங்கக்கா .ஓ இதத்தான் டைமிங் டச்சின்னு சொல்லுவாங்களோ. ஹி ஹி

    இனி நான் கும்போகோணத்துக்கு மாட்டுவண்டியில் வரலாமுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

    மாட்டு வண்டிய பூட்டிகிட்டு
    மல்லிகைபூவையும் வச்சிக்கிட்டு
    மச்சாங்கூட ஜோடி சேந்து
    ஊரு சுத்தபோறேன்-அப்போ
    மட மடன்னு வருங்கவிதை
    மனசுக்குள்ள ஏத்திக்கிடே வாரேன்..

    யக்கோவ் உங்களுக்கு 3+ 7 ச்சு. இங்கே 5+ 12 ஆச்சி டபுளுக்கு மேலேயே போகுதே..

    பதிலளிநீக்கு
  16. சம்பத் கூறியது...

    அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    என்றழக்காத ஜீவனில்லையே
    இப்போ அம்மாவை திட்டாத
    மனிதரில்லையே
    நேரில் போயி
    நின்னுகிட்டு
    நல்ல நாலு கேள்வியா கேட்டகனுங்கோஓ

    தக்க சமயத்தில் சூப்பர் பதிவுங்கோ//

    சம்பத் நல்லாவே பாடுறீங்க நீங்க அடுத்த ஜேசுதாசா.. நேருல நின்னா. கேள்வியா. நான் இந்த வெல்லாட்டுகெல்லாம் வரலைங்கோ..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ..

    பதிலளிநீக்கு
  17. Lakshmi கூறியது...

    ஏண்டிமா மல்லி ஊருக்குள்ள காலெடுத்து வெச்சே நீ துபாயிலே இருந்திருக்ககூடாதா

    மல்லி துபாய்ல இருந்துட்டாமட்டு இங்க விலை வாசில்லாம் இறங்கிடுமோ?

    வாங்கம்மா நல்லாயிருக்கீங்களா..

    எல்லாம் ஒரு நப்பாசைதான் வெளிநாடுபோனவங்களெல்லாம் திரும்பி நம்ம நாட்டுக்குள்ளே வந்தா நாடு தாங்கமதான் இப்படியெல்லாம் எகிரிபோச்சோ. அப்படியாவது திருப்ப வந்த எடத்துகே போயிட்டா கொறஞ்சிடுமோன்ன நெனப்புதான் வேறென்ன

    பதிலளிநீக்கு
  18. இந்த ஐடியா கூட நல்லா இருக்கு மல்லி .கவிதை சூப்பர் .என்ன ஒரு நாள் ஆகிடும் இங்கிட்டு வர.

    பதிலளிநீக்கு
  19. சாருஸ்ரீராஜ் கூறியது...

    இந்த ஐடியா கூட நல்லா இருக்கு மல்லி .கவிதை சூப்பர் .என்ன ஒரு நாள் ஆகிடும் இங்கிட்டு வர.//

    என்ன செய்யக்கா ஒரு மாசமானாலும் பரவாயில்லையின்னு வந்து சேரவேண்டியதுதான். ஹா ஹா

    பதிலளிநீக்கு
  20. தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம்.
    தேத்தண்ணீர் என்று தமிழ்நாட்டு முஸ்லிம் வீடுகளில் பயன்படுத்தும் அருமையான் வார்த்தை உள்ளது. " டீ" என்று சொல்ல பெண்களிடம் அடி வாங்காமல் இருக்கலாம்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது