நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓடிவாங்க கானம் அழைக்கிறது [தொடரோ தொடர்]

என்ன எல்லாரும் வந்தாச்சா ஒன்னுமில்லைங்கோ பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் வேணுமுன்னு சின்னப்புள்ளைங்க கேட்டுகிட்டாகளா. நாமளும் அவங்களோட கூட்டாச்சா அதாங்க [சின்னப்புள்ளையாச்சே] அதான் அவங்களோட கூட்டுசேந்துட்டேன் அப்படியே அவங்க சொன்னதையும் நம்ம ரசனைக்கு தகுந்ததுபோல் தேர்ந்தெடுத்துட்டேன் நல்லாக்குதான்னு கேக்கதான் கூப்பிட்டேன் நால்லாக்குதா

ஆசை

 புல்வெளி புல்வெளி தன்னில்
 பனித்துளி பனித்துளி வந்து
 தூங்குது தூங்குது பாராம்மா அதை
 சூரியன் சூரியன் வந்து
 செல்லமாய் செல்லமாய் கிள்ளி
 எழுப்புது எழுப்புது ஏனம்மா

 இலைகளில் ஒளிர்கின்ற பூக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
 கிளைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
 எனைக்கண்டு எனைக்கண்டு இசைமீட்டும்.

இயற்கை ரசித்து ரசித்து ஆனந்தப்படவைத்து அதனுள் மூழ்கவைக்கும் கானம்..

 மேமாதம்.

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன்
மடிமீது ஓரிடம் வேண்டும்.
மெத்தைமேல் கண்கள் மூடவுமில்லை
உன்மடிசேர்ந்தால் கனவுகள் கொள்ளை

வாழ்க்கையின் ஒருபாதி நானிங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நானிங்கு ரசிப்பேன்
காற்றிலொரு மேகம்போல் நான் என்றும் மிதப்பேன்.

தனக்குள் எழும் எண்ணத்தையெல்லாம் வர்ணனையோடு
வடிக்கும் வண்ணமிகு  கானம்.

 மெளன ராகம்.

சின்ன சின்ன வண்ணக்குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாட்டும் தேன்மொட்டு நானா நானா.

சொல்லதான் எண்ணியும் இல்லையே பாசைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்..

விலகிய அன்பு நெருங்கும்போது ஏற்படும் உணர்வை 
வெளிச்சமிட்டுகாட்டி வெக்கப்படவைத்து புரியவைக்கும் கானம்

 அலைபாயுதே.

 எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
 தவம்போல் இருந்து யோசிக்கிறேன் அதை
 தவனை முறையில் நேசிக்கிறேன்.

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி

அழகாய வரிகளால் இதயசெய்திகளை
இளகியகுரலில் சொல்லும் கானம்.


ஆட்டோகிராஃப்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..

யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒருகனவுகண்டால் இதை தினம் முயன்றால்.

சோர்ந்துகிடக்கும்  மனஉணர்வுகளை தட்டி எழுப்பும் கானம்


மெல்லத் திறந்தது கதவு

ஊருசனம் தூங்கிருச்சி
ஊதக்காத்தும் அடிச்சிருச்சி
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே!

உன்னெ எண்ணிநானே உள்ளம் வாடிபோனேன்
கன்னிபொண்ணுதானே ஏன்மாமனே
ஏன் மாமனே!

தன்மன எண்ணத்தை ஊரடங்கியபின் உரக்கபாடி
உள்ளத்தில் உள்ளத்தை ஊரறியச்செய்யும்  கானம்

 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
எங்கே எனது கவிதை
கனவிலே! எழுதிமடித்த கவிதை.
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதோ
கவிதைதேடிதாருங்கள் இல்லையென்
கனவை மீட்டுத்தாருங்கள்

தொலைத்த காதலை தொலைக்கமுடியாமல்
தவிக்கும் தவிப்பை உணர்த்தும் கானம்

 தீபாவளி

 கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் ஒருமயக்கம் அதை ஏற்று நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
ரெக்கை விறிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே!

காதலுக்கான எதிர்பார்ப்பில் தன்காத்திருத்தலை 
வெளிப்படுத்தும் காதல்  கானம்

ரோஜா
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவைத்த ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

நிறைவேறா ஆசையென்றபோதும் அதை நிறைவேற்ற
துடிப்பதுபோல் தூண்டிவிடும் கானம்.

வைதேகி காத்திருந்தாள்
அழகு மலராட அபிநயங்ககூட
சிலம்பொலியும் புலம்புவதைக்கேள்.
 விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பலயிரவு பலகனவு இருவிழியில் வரும்பொழுது..

பூங்காற்று மெதுவாக தொட்டாலும்கூட
பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றதே!

ஓர் விதவையின் உணர்வுகளையும் வலிகளையும்
வழியும்கண்ணீரோடு வதைவதை  உணர்த்தும் கானம்..

டிஸ்கி// இந்த தொடரை எழுத அழைத்த ரோஜாப்பூந்தோட்டம்...
மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி
மாணவியரின் படைப்புலகம்  அவர்கள்.அழைத்த அழைப்பையேற்று
இத்தொடர்..

ஏதோ நமக்கு தெரிந்தவரை எழுதியாச்சி கவிதை ரசனைகளோடு கலந்த கானங்கள் மிகப்பிடிக்கும். ஆனால் நமக்கு அவ்வளவாக சினிமா சம்மந்தான தொடர்பு கிடையாதுங்கோ.
தொடரில் பங்குள்ள விடுத்த அழைப்பையேற்று இவைகளை தொகுத்துள்ளேன் பிடித்திருந்தால் கருத்திடுங்கள்
அவர்கள் சவாலுக்கு அழைத்த கவிதை இங்கே பதிந்துள்ளேன் அதையும் பாருங்க

அட என்ன போறீங்க நில்லுங்க நில்லுங்க விதிமுறையே இதை தொடரனுமுன்னுதான். இத்தொடரை எழுத நான் அழைப்பது

ஆமினா [க்கா]

ஜெய்லானி அண்ணாத்தே!

வினோ!

வெறும்பய.

அப்பாடா நம்ம வேலை முடிஞ்சது இப்ப கிளம்புங்கோ வர்ட்டா...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

42 கருத்துகள்:

  1. அருமையான பாடல் தேர்வுகள்

    பதிலளிநீக்கு
  2. அழகான தேர்வு.. சகோ சில இடங்களில் பான்ட் நிறம் வெள்ளையில் இருக்கிறது சரியாகத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. S Maharajan கூறியது...
    அருமையான பாடல் தேர்வுகள்.//

    மிக்க நன்றி மகராஜன்.

    பதிலளிநீக்கு
  4. LK கூறியது...
    அழகான தேர்வு.. சகோ சில இடங்களில் பான்ட் நிறம் வெள்ளையில் இருக்கிறது சரியாகத் தெரியவில்லை.//

    எந்தயிடத்தில் சகோ. எனக்கு எல்லாம் சரியாக தெரிவதுபோல் இருக்கிறது. கொஞ்சம் விளக்கவும்

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மலிக்கா(க்கா) அருமையான தேர்வு! அழகான விளக்கங்கள். என்ன சட்டுன்னு என்னை இழுத்திவிட்டீங்க? :)

    முன்ன வச்ச அடிய பின்ன வைக்கிறதுல்ல. சோ நல்ல பாடல்களுடன் வரேன் :)

    பதிலளிநீக்கு
  6. அழகான தேர்வு...

    தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
  7. பாடல்கள் அருமை அதோடு நம்ம குட்டி தேவதை மிக மிக அருமை
    பார்வையே சூப்பராக இருக்கு..

    பதிலளிநீக்கு
  8. பெண்களின் உணர்வோடு தேர்ந்தெடுத்த நல்ல பாடல்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  9. மெல்லத் திறந்தது கதவு பாட்டும், வைதேகி காத்திருந்தாள் பாட்டும் ,
    இதில் இரண்டுமே சோகப்பாடாக இருந்தாலும் இசையின் வலிமையால வேற வேற உணர்வுகளை ( சாதா சோகம் , கேட்பவரையே மவுனமாக்கிவிடும் ))கொண்டு வந்த சூப்பர் எவர்கிரீன் பாட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. ஆ...இந்த பிள்ளை அட்டைப்பெட்டிக்குள் வந்த
    அதிரா மாதிரி இருக்கே..
    அதுவா
    அதேதானா
    அழகாய்
    அமர்களமாய்..!! (மாஷா அல்லாஹ் )

    பதிலளிநீக்கு
  11. பாட்டுக்கள்தானே தொடர் ஓக்கே ..பிச்சி பீசாக்கிட வேண்டியதுதான்..!! :-))

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பாடல் தேர்வு மிக அருமை, நல்ல ரசனை இருக்கிறது , உங்களிடம்.

    இவ்வளவு நேர்த்தியாக தேர்வு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை. அருமை.

    எங்கள் அழைப்பை தாய் அன்புடன் ஏற்றதற்கு மிக்க நன்றிகள்..

    பாடல் வரிகளை விட, பாடல் பற்றிய உங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்த்தோம், ஆனாலும் கூட நிறைவாய் தெரிகிறது. உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    மீண்டும் சொல்கிறோம்....இவ்வளவு நேர்த்தியாக தேர்வு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  13. தொடர் பதிவாக்க உங்கள் வலையுலக நண்பர்களை அழைத்தற்கும் மிக்க மகிழ்ச்சி..
    உடனே யெஸ் சொன்ன ஆமீனா அவர்களுக்கும் வந்தனங்கள்...
    ஆமீனா அவர்களுக்கு பதிவு வெளியிடும் முன் தகவல் சொல்லவும்.
    தினேஷ் அவர்களுக்கு முன்பு வந்து வடையை எடுக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  14. மலிக்கா- அவர்களுக்கு மீண்டும் ஒரு செய்தி,குழந்தைகள் பற்றி நாங்கள் அழைத்திருந்த அதிரடி கவிதை போட்டிக்கு நீங்கள் அனுப்பிய கவிதை மெகா ஹிட் ..
    நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் தயவால் , எங்கள் பதிவு இன்ட்லியால் பிரபலப்படுத்தப்பட்டது.. நன்றிகள்..

    கவிதை பற்றிய பின்னூட்டங்களை கண்டிப்பாக படிக்கவும்..
    http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  15. //ஆமினா [க்கா]

    ஜெய்லானி அண்ணாத்தே!

    வினோ!

    வெறும்பய.//

    அனைவரும் பெண் மனதினை , சிறப்பான விமர்சனங்களோடு பதிவு இட , நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. அருமையான தேர்வுகள் சகோதரி.. வித்தியாசமான பதிவு..

    தொடர அழைத்தமைக்கு நன்றி சகோதரி.. கூடிய விரைவில் என் தளத்தில் பதிவிடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  17. சகோ பதிவு போட்டுட்டேன் வந்து பாருங்க http://marumlogam.blogspot.com/2010/11/top-ten_23.html

    பதிலளிநீக்கு
  18. என்னாதிது எங்கே போனாலும் ஒரே பாடல் பதிவுத் தொடரா இருக்கு. இனி நல்லா பொழுது போகும்னு சொல்லுங்க!!

    பதிலளிநீக்கு
  19. நல்ல பாடல்கள்.. மனதை மயக்கும் இசையால் கட்டிபோட்ட பாடல்கள். இசைஞானியின் தாலாட்டில் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    தொடர்பதிவா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  20. அத்தனையும் என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் அக்கா...என்னை யாரும் அழைத்தால் உங்க பக்க லிங்க் கொடுத்துடுவேன்....எப்பூடி???!!!!!!!!

    பதிலளிநீக்கு
  21. அருமையான தேர்வு. கலக்கீட்டிங்க

    பதிலளிநீக்கு
  22. ஆமினா கூறியது...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மலிக்கா(க்கா) அருமையான தேர்வு! அழகான விளக்கங்கள். என்ன சட்டுன்னு என்னை இழுத்திவிட்டீங்க? :)

    முன்ன வச்ச அடிய பின்ன வைக்கிறதுல்ல. சோ நல்ல பாடல்களுடன் வரேன் :)//

    சட்டுன்னா அதானே நம்ம வேலை..
    எழுதுங்கோ நாங்களும் ரசிக்கவேணாமா..

    பதிலளிநீக்கு
  23. LK கூறியது...
    labels and the person names you have invited.//

    இப்போ சரியாச்சா சகோ மாற்றிவிட்டேன்..நன்றிமா..

    பதிலளிநீக்கு
  24. சாருஸ்ரீராஜ் கூறியது...
    பாடல்கள் அனைத்தும் சூப்பர்.//

    நன்றிக்கா எங்கேக்கா அளையே காணோம் செல்லங்கள் சுகமா.


    சே.குமார் கூறியது...
    அழகான தேர்வு...

    தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும்.//

    போட்டாச்சு.
    மிக்க நன்றி குமார். ரொம்ப நல்லதாப்போச்சி மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  25. dineshkumar கூறியது...
    அருமையான தேர்வு சகோ.//
    மிக்க நன்றி சகோ..


    //சுகந்தி.. கூறியது...
    பாடல்கள் அருமை அதோடு நம்ம குட்டி தேவதை மிக மிக அருமை
    பார்வையே சூப்பராக இருக்கு.//

    அப்படியாம்மா இந்த பெருநாளைகு எடுத்த போட்டோ. என்னைபார்ப்பதுபோலவே இருக்குள்ள என் குட்டி தேவதை..

    ரொம்ப சந்தோஷம்மா. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  26. ஹேமா கூறியது...
    பெண்களின் உணர்வோடு தேர்ந்தெடுத்த நல்ல பாடல்கள் தோழி !..//

    மிக்க நன்றி தோழி..


    //ஜெய்லானி கூறியது...
    மெல்லத் திறந்தது கதவு பாட்டும், வைதேகி காத்திருந்தாள் பாட்டும் ,
    இதில் இரண்டுமே சோகப்பாடாக இருந்தாலும் இசையின் வலிமையால வேற வேற உணர்வுகளை ( சாதா சோகம் , கேட்பவரையே மவுனமாக்கிவிடும் ))கொண்டு வந்த சூப்பர் எவர்கிரீன் பாட்டுக்கள்.//

    சொகராகம் சோகம்தானே. ச்சே சோகராகம் சொகந்தானே.

    நன்றிங்கங்கோ அண்ணாதே..

    பதிலளிநீக்கு
  27. ஜெய்லானி கூறியது...
    ஆ...இந்த பிள்ளை அட்டைப்பெட்டிக்குள் வந்த
    அதிரா மாதிரி இருக்கே..
    அதுவா
    அதேதானா
    அழகாய்
    அமர்களமாய்..!! (மாஷா அல்லாஹ் ).//

    அவுகளேதான்
    அந்தகுட்டி தேவதை
    ஆதிராவேதான்.
    அமர்களமாய் அமர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டாள்..



    //ஜெய்லானி கூறியது...
    பாட்டுக்கள்தானே தொடர் ஓக்கே ..பிச்சி பீசாக்கிட வேண்டியதுதான்..!! :-))//

    அதுக்குதானே அழைதுள்ளோம் பீசாக்கி பட்டைகிளப்பிடனும் ஓகேவா..

    பதிலளிநீக்கு
  28. பாரத்... பாரதி... கூறியது...
    உங்கள் பாடல் தேர்வு மிக அருமை, நல்ல ரசனை இருக்கிறது , உங்களிடம்.

    இவ்வளவு நேர்த்தியாக தேர்வு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை. அருமை.

    எங்கள் அழைப்பை தாய் அன்புடன் ஏற்றதற்கு மிக்க நன்றிகள்..

    பாடல் வரிகளை விட, பாடல் பற்றிய உங்கள் விமர்சனங்களை அதிகம் எதிர்பார்த்தோம், ஆனாலும் கூட நிறைவாய் தெரிகிறது. உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    மீண்டும் சொல்கிறோம்....இவ்வளவு நேர்த்தியாக தேர்வு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.//

    நன்றி பாரத். இன்னும் அதிக விமசர்சனம் இனி தொடர்பவர்கள் தொடுத்து உங்கள் எதிர்பார்ப்பை பூத்தியாக்கட்டும். எனக்கு சினிமாக்களின் தாக்கம் மிக மிக குறைவு.அதனால் அதனை விமர்சிக்க தெரியவில்லை.

    கவிதை வரிகள் கலந்தபாடல்கள் கேட்கப்பிடிக்கும் அதனோடு ஒன்றப்பிடிக்கும் அவ்வளவுதான் அதனைக்கொண்டே இத்தேர்வுகள்
    என்னையும் இதனுள் அழைத்து என் ரசனையையும் வெளிப்படுத்தவைதமைக்கு மகிழ்ச்சியே.

    தொடரட்டும் உங்களின் நல்ல சிந்தனைகளின் வெளிபாடுகள்..

    பதிலளிநீக்கு
  29. பாரத்... பாரதி... கூறியது...
    மலிக்கா- அவர்களுக்கு மீண்டும் ஒரு செய்தி,குழந்தைகள் பற்றி நாங்கள் அழைத்திருந்த அதிரடி கவிதை போட்டிக்கு நீங்கள் அனுப்பிய கவிதை மெகா ஹிட் ..
    நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் தயவால் , எங்கள் பதிவு இன்ட்லியால் பிரபலப்படுத்தப்பட்டது.. நன்றிகள்..

    கவிதை பற்றிய பின்னூட்டங்களை கண்டிப்பாக படிக்கவும்..
    http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_22.html//

    மழலை மலர்களைபற்றி யார்சொன்னாலும் மெகாஹிட் ஆகிடும் .

    என்தயவால் என்பதுவேண்டாம். நம் எல்லோர்தயவால். பின்னூட்டமிட்டு ஓட்டும்போட்டு நம்மை இந்தளவிற்க்கு ஊக்கம்தரும் அன்பர்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். எதுவென்றபோதும் பிறமனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினால் அதுவே சாதித்த்மைகு சமம்..

    மீண்டும் அனைவருக்கும் நன்றிகள் பல. என்றும்
    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  30. வெறும்பய கூறியது...
    அருமையான தேர்வுகள் சகோதரி.. வித்தியாசமான பதிவு..

    தொடர அழைத்தமைக்கு நன்றி சகோதரி.. கூடிய விரைவில் என் தளத்தில் பதிவிடுகிறேன்...//

    அழைப்பை ஏற்று தொடர விருப்பம் தெரிவிதமைக்கு மிக்க நன்றி வெறும்பய..

    பதிலளிநீக்கு
  31. அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்வரிகள்...சூப்பரே சூப்பர் அக்கா..

    பதிலளிநீக்கு
  32. எம் அப்துல் காதர் கூறியது...
    என்னாதிது எங்கே போனாலும் ஒரே பாடல் பதிவுத் தொடரா இருக்கு. இனி நல்லா பொழுது போகும்னு சொல்லுங்க!!.//

    காலம் ஒவ்வொன்றையும் கடந்துபோகிறது இது இக்காலம்போல அதான்..
    அதுசரி இதில்தான் பொழுதே போவுதா:}}}}}}}

    பதிலளிநீக்கு
  33. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    நல்ல பாடல்கள்.. மனதை மயக்கும் இசையால் கட்டிபோட்ட பாடல்கள். இசைஞானியின் தாலாட்டில் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

    தொடர்பதிவா.. நடக்கட்டும் நடக்கட்டும்.//

    அப்படியா ஷேக்.நீங்கள் ரசித்துக்கேட்க்கும்பாடல்களா..
    நடக்குது நடக்குது ரசனையோடு..

    நன்றி ஷேக்..

    பதிலளிநீக்கு
  34. அத்தனையும் முத்தான் பாடல்க. பாராட்டுக்கள.

    பதிலளிநீக்கு
  35. நல்ல பாடல் தெரிவுகள் மலிக்கா.. ரொம்ப நாளா பிளாக் பக்கமே வரமுடியல்ல ரொம்ப ஆணி..

    பதிலளிநீக்கு
  36. //சின்ன சின்ன வண்ணக்குயில்
    கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
    பூத்தாட்டும் தேன்மொட்டு நானா நானா.//

    aahaa///eppaa keettaalum theenaa inikkum paattu athu... :)

    பதிலளிநீக்கு
  37. அருமையான பாடல் தேர்வுகள்.//

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது