நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்.

அன்னைமொழி தமிழை
அமுதமாய் அருந்தி
அனுதினமும் வளர்ந்து

அயல்தேச மண்ணில் வந்து
அயராது உழைக்கும் போதும்

அலுப்புகள் இல்லாது
அடிமனதில்
அப்பப்ப தோன்றும் ஆசைகளெல்லாம்

அழகிய தமிழ் தனிலே
அடுக்கடுக்காய் எழுதி வைத்து

அடிநெஞ்சில் அச்சிட்டு
அழியாமல் காத்து

சேத்து வைத்த காத்ததெல்லாம்-இப்போ
செந்தமிழில் பாடிட வா

தேசம்தாண்டி வந்தபோதும்
நேசக்கரம் நீட்டிட வா

தாய்தமிழைத் தாலாட்டி
தாளம் ஒன்று போட்டிட வா

முத்தமிழாம் மும்மொழியை
மூச் சுள்ளவரை மொழிந்திட வா

பைந்தமிழாம் பசும்பொழியை
பாரெங்கும் போற்றி பரப்பிட வா

செம்மொழியாம் தமிழ்மொழியை
சிறப்பாய் சிகரத்தில் ஏற்றிட வா

என்னுதிரத்தில் கலந்திட்ட
தமிழ்தனையே
வேராக பயிரிடுவேன்

இந்த உலகெங்கும்
விழுதாக்க
இயன்றவரை உழைத்திடுவேன்

தமிழ்நாட்டில் பிறந்ததற்கு –என்
தாய் தந்தைக்கு
நன்றி சொல்லிடுவேன்

உடல்தந்து உயிர்தந்து
தமிழ்தந்த என் இறைவனுக்கு
தலை வணங்கிடுவேன்..


அமெரிக்கத் தலைநகரில் செர்மன் டவுன் நகர உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜூலை 10, 2010 சனி மாலை.தோழி விஜி சத்தியா அவர்களால் வாசிக்கப்பட்ட என் கவிதை
தோழி விஜி அவர்கள் எனக்கு தமிழ்குடும்பத்தில் அறிமுகம்.[நேர்முகம் இல்லை ]
விஜி கிச்சன் என்று வலைப்பூவும் நடத்துறாங்க.
ஜூலை 10, 2010 விழா இருப்பதாவும் அதில் கவிதை வாசிக்கவேண்டும் எனக்கு ஒரு கவிதை எழுதிதாருங்கள் தலைப்பு இதுதான் //வேர்கள் தமிழில் விழுதுகள் உலகெங்கும்/. 5. நிமிடத்திற்க்குள் கவிதையிருக்கனுமாம் என்றார்கள். எழுதியனுப்பினேன்.//உங்க கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராடுக்கள் கிடைத்திருக்கு, நான் தான் ஐந்து நிமிடம் என்று சொன்னதினால் நீங்க தந்திங்க. இப்ப சொல்கிறார்கள், இன்னும் கொஞ்சம் கூட சேருங்க என்று, முடிந்தால் கொஞ்சம் கூட சேர்த்து தர இயலுமா?
இது சின்னதாக இருக்கு என்றும் சொன்னாங்க///என்று
மீண்டும் மெயில்.மீண்டும் பத்துவரிகள் இணைத்து அனுப்பினேன்.

அந்த கவிதைதான் நீங்க மேலே படிப்பது. [அவங்க இணைத்த வரிகள் இதில் இல்லை]
விஜிஅவர்கள் மேடையில் வசித்து கவிஞர்.தாமரை கைகளால் சர்டிப்பிக்கேட்டும் வாங்கியுள்ளார்கள்.


 இன்று அவர்களின் மெயில்கண்டதும்.மனதில் சந்தோஷம் அளவிடமுடியாமல் நானே வாங்கிய மகிழ்ச்சியை உணர்ந்தேன்.[அதை உங்களோடு சேர்ந்து மகிழ்ந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று நினைத்து இதில் வெளியிடுகிறேன்] என்தோழி வாங்கினால் என்ன நான் வாங்கினால் என்ன! எல்லாம் ஒன்றுதான்.என் எழுத்துக்கள் பிறருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையுமே தரவேண்டுமென்ற எண்ணம் அப்ப அப்ப நிஜமாகி என்னை உற்சாகப்படுத்துகிறது.
கடல்கடந்து கடல்கடந்தும் காற்றோடு கலந்து என்சிந்தனைகள் கவிவழியே இந்த பிரபஞ்சம் முழுவதும் வலம்வர வேண்டும்[இதுகொஞ்சம் ஓவருதான்] இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அடுத்தது ஊக்கம்தரும் உங்களுக்கும் நன்றிகள்.

இக்கவிதையை வாசித்து வந்தபின் சொல்லுங்கள் என் தளத்தில் வெளியிடுகிறேன் என அவர்களிடம் சொல்லியிருந்தேன். இதோ செய்துவிட்டேன் மனநிறைந்த சந்தோஷத்துடன்.
தமிழை உலகெங்கும் பரப்பிட முயற்சிக்கும் வண்ணமாக....

அன்புத்தோழி விஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
விஜி அவர்கள் எனக்கு அனுப்பிய நன்றிக்கடிதம்.
//நன்றி. நன்றி நன்றி....
விழா நன்றாக நடந்தது. எல்லாரும் என் கவிதையை கேட்டு ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் அதில் 7 வரிகள் இணத்து படித்தேன்.
கவிஞர் தாமரை அவர்கள் முன்னிலையில் நடந்தது எங்க கவியரங்கம்.
மிக்க நன்றாகவே இருந்தது. தாமரை அவர்கள் எங்களுக்கு சர்டிப்பிக்கேட் தந்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
அன்புடன் தோழிவிஜி..//

கவிதையின் விதிமுறை நோட்டிஸ் விஜிசத்தியா அவர்கள் அனுப்பியது
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, கவியரங்க நெறிமுறைகள்
நோக்கமும் குறிக்கோளும்:
தமிழ் இன, மொழி, பண்பாடு காத்தலும் போற்றுதலுமே கவியரங்கத்தின் தலையாய நோக்கமாகும். அதைக் கருத்திற் கொண்டு, தலைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக இலக்கியச் சுவையோடும் சொல் வளத்தோடும் கவிதை நயம் வெளிப்படுதலே இந்நிகழ்ச்சியின் சீரிய குறிக்கோள்.

நெறிமுறைகள்:

.கவிதையின் பாடுபொருள் தலைப்பை ஒட்டியே இருக்க வேண்டும்.

· கவிதையானது நான்கு மணித் துளிகளுக்குள் முடிவுறும்படியாக, இருபத்து ஐந்து வரிகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும்.

· தனிமனிதத் தாக்குதல், அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதி, மதம் மற்றும் இன்னபிற ஒவ்வாதன இல்லாதிருந்து, பேரவையின் மாண்பு காக்கும்படியாக இருத்தல் மிக அவசியம்.

· கவிதைகள் வேறெங்கும் வெளிப்படாதனவாக இருத்தல் வேண்டும்.

· இன எழுச்சி கொள்ளும்படியான மேன்மைக் கருத்துகளை, நறுக்கெனத் தைக்கும்படியாக வெளிப்படுத்துதல் சிறப்பைக் கூட்டும்.

· விமர்சனத்திற்கான களம் என்பதைவிட, உணர்வை ஊட்டுவதற்கான மேடை இது என்பதைக் கருத்தில் கொண்டு கவிதை வடித்தல் நிகழ்ச்சிக்கு மெருகூட்டும்.
· ஜூன் 19, 26 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் பல்வழி அழைப்பில் தவறாது கலந்து கொளல் வேண்டும்.
· ஜூன் பதினொன்பதாம் தேதிக்கு முன்னரே, உங்கள் கவிதையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு செய்வது கவிதைக்கு நயம் கூட்டவும், ஒரே கருத்து மற்றவர்களிடத்தும் வெளிப்படுவதைத் தவிர்க்க வழி வகுக்கும்.
· விழா அரங்கிற்கு வருமுன்னர், தாம் வாசிக்க இருக்கும் கவிதையை ஏற்ற இறக்கத்துடன் வாசித்து ஒத்திகை பார்த்திருத்தல் அவசியம். விரைவாகத் தங்கு தடையின்றி இயம்புதல் என்பது வெளிப்படுதிறனைச் செம்மைப்படுத்தும்.
· கிடைக்கும் நான்கு மணித்துளியில் நிறைவான கருத்தைச் சொல்லிக் கரவொலி பெறுவதே எளிதானது. நீண்ட நேரம் வாசிக்க வாசிக்க, கவிநயத்தின் வீரியம் தளர்ந்து நலிந்து போக வழி வகுக்கும். எனவே, நயமுடன் சுருங்கச் சொல்லி நிறைவை எட்டுதலே கவிஞருக்கு அழகு!
நிகழ்ச்சி பற்றிய மேலதிகத் தகவலுக்கு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை எவ்விதத் தயக்கமுமின்றி நாடவும். ///

என்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

39 கருத்துகள்:

  1. காஞ்சி முரளி கூறியது...
    ஐ.. நாந்தான் 1stடா.//

    ஐ நீங்களேதான் சகோ.

    பதிவபோட்டுவிட்டு திரும்புறேன் உங்க கருத்து.மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்க‌ள்... க‌விதையும் சூப்ப‌ர‌ இருக்கு..

    பதிலளிநீக்கு
  3. தமிழள் ஒருத்தி...
    தமிழால்
    தமிழன்னைக்கு...
    பூமாலையாய்...ஓர்
    பாமாலை
    சாற்றியுள்ளாள்....

    தமிழன்னைக்கு...
    கவிதாயினி மலிக்கா... தன்
    கவிதையால் சூட்டிய
    கவிமாலை மிக...மிக...அருமையாயிருக்கு...!

    இக்கவியை..
    வடிக்க
    தங்களை தூண்டிய 'தோழி விஜி'க்கும் பாராட்டுக்கள்....

    துபய் வரைக்குமே முடியல...
    அமெரிக்கா வரைக்குமா...!
    முடியலடா சாமி.. இப்பவே கண்ணக் கட்டுதே...

    anyhave....
    வாழ்த்துக்கள்... கவிஞர் மலிக்கா...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் மல்லி உங்கள் கவிதை மிக அருமை. தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாய் அமைந்துள்ளது.

    விஜிக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. நட்புக்காக தந்த கவிதை பாரட்டுகுரியது.உன் சிந்தனைகள் கவி விழியே இந்த பிரபஞ்சம் முழுவதும் உங்கள் விருப்பப்படி வலம் வரும் சகோதரி(மல்லிக்கா முத்துப்பேட்டை என்றதும் கூடுதல் மகிழ்ச்சி)

    பதிலளிநீக்கு
  6. kavithai mika mika arumaingka malikka paaraaddukkaL

    inum munerungkaL..

    பதிலளிநீக்கு
  7. நல்ல அருமையான கவிதை.
    பாராட்டுக்கள் மலிக்கா.

    தோழி விஜிக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மல்லி கவிதை நல்லா இருக்கு , உண்மையில் உங்களுக்கு பெரிய மனது தான்.
    வாழ்த்துக்கள் மல்லி & விஜி

    பதிலளிநீக்கு
  9. தேசம்தாண்டி வந்துபோதும்
    நேசக்கரம் நீட்டிட வா.//

    இதுதான் மல்லிக்கா உங்களிடம் பிடிததே.
    உங்களை சந்தித்ததும் கரத்தைப்பிடித்து குலுக்கிவிடுவேன் விடாமல்.

    நேசமுடன் சந்தோஷி

    பதிலளிநீக்கு
  10. தமிழைப் புகழ்ந்தால் எந்த வார்த்தைகள்தான் இனிக்காது மல்லிக்கா.அருமை.
    வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  11. நட்புக்காக தந்த கவிதை பாரட்டுகுரியது.

    பாராட்டுக்கள்...


    தோழி விஜிக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் மலிக்கா. எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. எங்கள் சகோதரி மேன்மேலும் புகழ்பெறணும்.. எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.

    கவிதை ரொம்ப நல்லாருக்கு.. வரிகளில் தமிழின் உணர்வு உலகமெங்கும் செல்கிறது. சகோதரி விஜிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  13. மலிக்கா அக்கா நலமா? உங்களின் கவிதை வரிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு படித்தேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கு... புக்காக வெளியிடலாமே உங்கள் கவிதை தொகுப்பை?

    பதிலளிநீக்கு
  14. திருச்சி சையது12 ஜூலை, 2010 அன்று PM 11:16

    உங்க தமிழ் அமெரிக்கா வரை சென்றதில் ஆனந்தம் தங்கச்சி!

    திருச்சி சையது

    பதிலளிநீக்கு
  15. தாரணி போற்றும் தமிழுக்கு மலிக்கா அக்காவின் தங்கக் கவிதை...வாழ்த்துகள் அந்த கவிதை வாசிப்பை பதிந்து வைத்திருந்தால் பதிவிடுங்கள்...தேன்வந்து பாயட்டும் காதிலும்...

    பதிலளிநீக்கு
  16. ஹாதிராமரியம்13 ஜூலை, 2010 அன்று AM 6:56

    மலிக்கா ரொம்ப சூப்பர் தமிழ் கவிதை. என்னமா எழுதுறீங்க நிங்க எங்களுக்கு டி கேவில் பிரண்டாகிடைச்சதுக்கு கொடுத்துவைக்கனும் நாங்க.

    ரொம்ப சந்தோஷமாக இருகுப்பா. இன்னும் நீங்க வளர்ச்சியடையனும்.
    உங்கள் புகழ் மென்மேலும் உயரனும்

    உண்ஐயான நட்புடன் என்றும் உங்கள அன்பை பெறத்துடிக்கும்.தோழி ஹாதிரா..

    பதிலளிநீக்கு
  17. ஹாதிராமரியம்13 ஜூலை, 2010 அன்று AM 6:56

    மலிக்கா ரொம்ப சூப்பர் தமிழ் கவிதை. என்னமா எழுதுறீங்க நிங்க எங்களுக்கு டி கேவில் பிரண்டாகிடைச்சதுக்கு கொடுத்துவைக்கனும் நாங்க.

    ரொம்ப சந்தோஷமாக இருகுப்பா. இன்னும் நீங்க வளர்ச்சியடையனும்.
    உங்கள் புகழ் மென்மேலும் உயரனும்

    உண்ஐயான நட்புடன் என்றும் உங்கள அன்பை பெறத்துடிக்கும்.தோழி ஹாதிரா..

    பதிலளிநீக்கு
  18. நாடோடி கூறியது...
    வாழ்த்துக்க‌ள்... க‌விதையும் சூப்ப‌ர‌ இருக்கு
    .//

    ரொம்ப சந்தோஷம் ஸ்டீபன் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. //காஞ்சி முரளி கூறியது...
    தமிழள் ஒருத்தி...
    தமிழால்
    தமிழன்னைக்கு...
    பூமாலையாய்...ஓர்
    பாமாலை
    சாற்றியுள்ளாள்....

    தமிழன்னைக்கு...
    கவிதாயினி மலிக்கா... தன்
    கவிதையால் சூட்டிய
    கவிமாலை மிக...மிக...அருமையாயிருக்கு...!//

    வாங்க கவிஞரே! தங்களின் அன்பான கவிதையால் என்னை பாராட்டியமைக்கு அகமும் புறமும். மகிழ்ச்சியில்..

    //இக்கவியை..
    வடிக்க
    தங்களை தூண்டிய 'தோழி விஜி'க்கும் பாராட்டுக்கள்....

    துபய் வரைக்குமே முடியல...
    அமெரிக்கா வரைக்குமா...!
    முடியலடா சாமி.. இப்பவே கண்ணக் கட்டுதே...//

    இதுக்கேவா கண்ணக்கடுத்து இன்னுமுல்ல இருக்கு..


    /anyhave....
    வாழ்த்துக்கள்... கவிஞர் மலிக்கா...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....
    //

    கவிஞர் சாருவசந்தின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  20. அபிமன்யு கூறியது...
    வாழ்த்துகள் மல்லி உங்கள் கவிதை மிக அருமை. தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாய் அமைந்துள்ளது.

    விஜிக்கும் பாராட்டுக்கள்.//


    வாங்க அபி தங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  21. mkrpost கூறியது...
    நட்புக்காக தந்த கவிதை பாரட்டுகுரியது.உன் சிந்தனைகள் கவி விழியே இந்த பிரபஞ்சம் முழுவதும் உங்கள் விருப்பப்படி வலம் வரும் சகோதரி(மல்லிக்கா முத்துப்பேட்டை என்றதும் கூடுதல் மகிழ்ச்சி;//


    மிகுந்த மகிழ்ச்சி சகோதரர் அவர்களே! தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
    கூடுதல் மகிழ்ச்சிக்கு மிக்க சந்தோஷம்..

    sri கூறியது...
    kavithai mika mika arumaingka malikka paaraaddukkaL

    inum munerungkaL..//

    வாங்க sri தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  22. Karthick Chidambaram கூறியது...
    நல்ல அருமையான கவிதை.
    பாராட்டுக்கள் மலிக்கா.

    தோழி விஜிக்கும் பாராட்டுக்கள்.//

    வாங்க கார்த்திக் தாங்களின் பாராட்டுகளுக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  23. சாருஸ்ரீராஜ் கூறியது...
    மல்லி கவிதை நல்லா இருக்கு , உண்மையில் உங்களுக்கு பெரிய மனது தான்.
    வாழ்த்துக்கள் மல்லி & விஜி//

    அக்கா
    எனக்குமுதல் ஊக்கம் தந்தவங்க நீங்க
    உங்களைவிடவா எனக்கு பெரிய மனசு.
    ரொம்ப ரொம்ப நன்றிக்கா..



    //சந்தோஷிமகா கூறியது...
    தேசம்தாண்டி வந்துபோதும்
    நேசக்கரம் நீட்டிட வா.//

    இதுதான் மல்லிக்கா உங்களிடம் பிடிததே.
    உங்களை சந்தித்ததும் கரத்தைப்பிடித்து குலுக்கிவிடுவேன் விடாமல்.

    நேசமுடன் சந்தோஷி.//

    என்ன சந்தோஷி எப்படியிருக்கீங்க.
    குட்டிப்பொண்ணு எப்படியிருக்கா.
    கையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்னுடன் சேர்த்து. அஸ்கு புஸ்கு ஒரேநாளில் வந்துட்டு போயிடுவேணெல்லாம் கனவுகானாக்கூடாது ஓகே 1 வாரம் இருப்பேன் உங்ககூட வந்து குட்டிபொண்ணோடும் கொஞ்ச.

    தோழிகளின் நட்புகிடைக்க நாந்தான் கொடுத்துவைத்திருக்கனும்

    மகிழ்ச்சியாயிருக்குக்கா..

    பதிலளிநீக்கு
  24. ஹேமா கூறியது...
    தமிழைப் புகழ்ந்தால் எந்த வார்த்தைகள்தான் இனிக்காது மல்லிக்கா.அருமை.
    வாழ்த்துகள் தோழி.

    ஆமாம் தோழி தமிழ் என்றாலே தானாக வருது வார்த்தைகள் தேடாமலே!
    தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி..

    //சே.குமார் கூறியது...
    நட்புக்காக தந்த கவிதை பாரட்டுகுரியது.

    பாராட்டுக்கள்...


    தோழி விஜிக்கும் பாராட்டுக்கள்..

    வாங்க குமார். தாங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  25. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    வாழ்த்துகள் மலிக்கா. எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. எங்கள் சகோதரி மேன்மேலும் புகழ்பெறணும்.. எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.

    கவிதை ரொம்ப நல்லாருக்கு.. வரிகளில் தமிழின் உணர்வு உலகமெங்கும் செல்கிறது. சகோதரி விஜிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.//

    வாங்க ஷேக். அன்பான கருத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி சொல்லிவிடுகிறேன் விஜியிடம் வாழ்த்துக்களை..

    பதிலளிநீக்கு
  26. சிநேகிதி கூறியது...
    மலிக்கா அக்கா நலமா? உங்களின் கவிதை வரிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு படித்தேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கு... புக்காக வெளியிடலாமே உங்கள் கவிதை தொகுப்பை
    .//

    வாங்க ஃபாயிஜா எப்படியிருக்கீங்க பசங்க எப்படியிருக்காங்க குட்டி தேவதை எப்படியிருக்கு.

    எவ்ளோ நாளாச்சி வந்தாச்சா.

    ஃபாயிஜா தங்களைபோன்ற நட்பு வட்டாரத்தினால்தான் டிகேவில் தனிப்பகுதியே கிடைத்தது கவியெழுத.
    மறக்கமுடியுமா அதை.

    உண்மையான நேசங்களின் தூண்டுதல்களால்தான் இன்ஷா அல்லாஹ் விரைவில் கவிதை தொகுப்பு வெளியிட உள்ளேன்.

    இன்ஷா அல்லாஹ் விரைவில் அது சம்பந்தமாக இடுகை வெளியிடுவேன்..

    இறைவனிடன் எனக்காவும் துஆச்செய்யுங்கள்.

    வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி ஃபாயிஜா..

    பதிலளிநீக்கு
  27. திருச்சி சையது கூறியது...
    உங்க தமிழ் அமெரிக்கா வரை சென்றதில் ஆனந்தம் தங்கச்சி!

    திருச்சி சையது.//

    வாங்க அண்ணா எப்படியிருக்கீங்க நீண்ட நாள்களாய் ஆளைக்காணோம். ஊருக்கு போயிட்டீங்களா!

    தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துகும் மிக்க நன்றி தொடர்ந்து வாங்க. தங்கைக்கு ஊக்கம் தாங்க. கருத்துக்கள் மூலமாக..

    பதிலளிநீக்கு
  28. seemangani கூறியது...
    தாரணி போற்றும் தமிழுக்கு மலிக்கா அக்காவின் தங்கக் கவிதை...வாழ்த்துகள் அந்த கவிதை வாசிப்பை பதிந்து வைத்திருந்தால் பதிவிடுங்கள்...தேன்வந்து பாயட்டும் காதிலும்.//

    கேட்கிறேன் விஜியிடம் இருந்தால் பதிகிறேன்..
    அன்புதம்பியின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  29. ஹாதிராமரியம் கூறியது...
    மலிக்கா ரொம்ப சூப்பர் தமிழ் கவிதை. என்னமா எழுதுறீங்க நிங்க எங்களுக்கு டி கேவில் பிரண்டாகிடைச்சதுக்கு கொடுத்துவைக்கனும் நாங்க.

    ரொம்ப சந்தோஷமாக இருகுப்பா. இன்னும் நீங்க வளர்ச்சியடையனும்.
    உங்கள் புகழ் மென்மேலும் உயரனும்

    உண்ஐயான நட்புடன் என்றும் உங்கள அன்பை பெறத்துடிக்கும்.தோழி ஹாதிரா..

    அல்லாஹூ என் கண்ணையே நம்ப முடியலையே. என்னமா எப்படியிருக்கிங்க காங்கேயம் போய்வந்தாச்சா. நினைவு இருக்கா[உனக்கு இருக்கா] அப்படின்னு கேட்பது கேட்குது சாரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.
    டிகேவிலும் ரொம்ப நாளாக்காணோம்.
    மெசேஜ் அனுப்பினேன்.

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு
    என் தோழிகளின் வரவுகள் என்னை உற்சாகத்தில் மிதக்கவைக்குது. காலையில் இந்த கருத்தைபார்த்தும் யார்டாயிதுன்னு பாத்தா நீங்க சந்தோஷம்பா.
    என் வளர்ச்சியில் என் தோழமைகளான நட்புகளின் பக்கபலமும்
    சேர்திருக்கு என பெருமையாக இருக்கு.
    இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!;

    முதல் வருகைகும் முத்தான கருத்துக்கும் மனம்மகிழ்சிந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  30. ஆஹ். இது என்ன ஆச்சிரியம் அபூர்வம்..?

    அப்படி உங்க கவிதையை கேக்க அவங்க இல்ல குடுத்து வச்சிருக்கனும் (தாமரை)


    வாழ்த்துக்கள்..!!! வாழ்த்துக்கள்...!!! வாழ்த்துக்கள்.........!!!!!!!!!


    ( அப்படியே நான் குடுத்த மாதிரி நிஜ அவார்ட் (ஆஸ்கார்) ஒன்னு வாங்கிட்டு வந்துடுங்க )

    பதிலளிநீக்கு
  31. //ஜெய்லானி கூறியது...
    ஆஹ். இது என்ன ஆச்சிரியம் அபூர்வம்..?

    அப்படி உங்க கவிதையை கேக்க அவங்க இல்ல குடுத்து வச்சிருக்கனும் (தாமரை).//


    ஏன் அண்ணாத்தே இப்படியெல்லாம் . அவங்களெல்லாம் நம்மளைவிட ரொம்ப ரொம்ப சீனியருங்க. நம்ம என்ன சும்மாச்சிக்கும்.



    /வாழ்த்துக்கள்..!!! வாழ்த்துக்கள்...!!! வாழ்த்துக்கள்.........!!!!!!!!!


    ( அப்படியே நான் குடுத்த மாதிரி நிஜ அவார்ட் (ஆஸ்கார்) ஒன்னு வாங்கிட்டு வந்துடுங்க )

    13 ஜூலை, 2010 8:47 am//

    நாங்க கடைசியா வாரோமுன்னு நீங்களும் அப்படியே வாரீகளா புரியுது புரியுது..

    இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்.
    அம்மாம் பெரிய ஆசையெல்லாமில்லைங்கண்ணா.
    ஹி ஹி தந்தாலும் வேணாமுன்னா சொல்லப்போறோம்..


    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாத்தே..

    பதிலளிநீக்கு
  32. உங்களுடைய கவிதை அமெரிக்க நாட்டில் அரங்கேறியது என்ற செய்தி படித்து, மனதில் இனம் தெரியாத உற்சாகம், சகோதரி விஜிக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  33. அழகு கவிதை! அருமையான விவரிப்பு

    பதிலளிநீக்கு
  34. இளம் தூயவன் கூறியது...
    உங்களுடைய கவிதை அமெரிக்க நாட்டில் அரங்கேறியது என்ற செய்தி படித்து, மனதில் இனம் தெரியாத உற்சாகம், சகோதரி விஜிக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.//

    சகோதரர் அவர்களே தங்களின் அன்புக்கு மிக்க நன்றி.
    தாங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  35. pinkyrose கூறியது...
    அழகு கவிதை! அருமையான விவரிப்பு.//

    வாங்க பிங்கி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  36. மலிக்கா ராத்தா,
    கருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
    என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!

    பதிலளிநீக்கு
  37. அபூ ஜாசிம் கூறியது...
    மலிக்கா ராத்தா,
    கருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
    என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!//

    வாங்க ஜாசீம். தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
    பார்ப்பதோடு அல்லாமல் கருத்துமிடுங்கள் குறை நிறைகளை.

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  38. மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது