
சிரிப்பு என்பதின் அர்த்தமே சிறப்பு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்
புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்
புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
பொல்லாதவர்கூட உன்முகம்கண்டு புன்னகை பூத்திடுவர்
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா
சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்
எதுவுமே அளவுக்கு மீறிவிட்டால் ஆபத்து
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
சரிதான் மலிக்கா...சிரிக்கத் தெரிந்தவனுக்கு இந்த உலகமே சொந்தக்காரர்கள். முறைக்கத் தெரிந்தவனுக்கு விரோதிகள். நல்ல கவிதை
பதிலளிநீக்கு/// சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
பதிலளிநீக்குசிரித்து வாழ்வதிலிருந்து விலகு ///
சிந்திக்க வேண்டிய வரிகள் தான் !
/நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்/
பதிலளிநீக்குஅருமை. அழகான கவிதை. பாராட்டுகள்.
இந்த வரிகள் அருமை...
பதிலளிநீக்குஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு
இந்த வரிகள் அருமை...
பதிலளிநீக்குஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு
சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க.
பதிலளிநீக்கு//சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
பதிலளிநீக்குசிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்//
உண்மைதானே....
கவிதை நன்று.....
//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//
பதிலளிநீக்குஇது என்ன????????
மலிக்கா சிரிப்பு பற்றிய உங்கள் கவிதை அருமை அதுவும் குழந்தைச் சிரிப்பு என்பதால் ஒருபடி மேல்.
பதிலளிநீக்குநல்ல ரசனை மலிக்கா ..சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்துவிடாதே...
பதிலளிநீக்குமனிதனையும் விலங்கையும் வேறுபடுத்தி காட்டுவது சிரிப்பு மட்டுமே
பதிலளிநீக்குகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதமிழ்நெஞ்சம்
//ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
பதிலளிநீக்குஅது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா//
கவிதை நல்லா இருக்கு. மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, புலவன் புலிகேசி ..
பதிலளிநீக்குமிக்க நன்றி, கேசவன்
மிக்க நன்றி, வானம்பாடிகள்
மிக்க நன்றி,சாருக்கா
மிக்க நன்றி,பாலாஜி
//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//
இது என்ன????????
அதுவா பாலாஜி நீங்கள் எத்துனையாவது நபராக இதை வாசிக்கிறீர்கள் என காட்டிக்கொண்டு இருந்தது, தற்போது //இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//
என்றுமட்டும் காட்டுகிறது வெக்கப்பட்டு ஒளிந்துகொண்டதுவோ என்னவோ..
மிக்க நன்றி: தியா
பதிலளிநீக்குமிக்க நன்றி: வெண்ணிறவு கார்த்திக்
மிக்க நன்றி: நவாஸுதீன் அண்ணா
/நாஞ்சில் பிரதாப் கூறியது...
பதிலளிநீக்குஇந்த வரிகள் அருமை...
ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு/
வாங்க நாஞ்சில் பிரதாப். முதமொறையா வந்திருக்கீங்க,ஓட்டும் போட்டிருக்கீங்க மிக்க நன்றிங்க,
நல்ல ஐடியாவா இருக்கே [பிளாக்கில் பேனர் அடிச்சி ஒட்டுறது]
தொடர்ந்து வாருங்கள்
/ பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
பதிலளிநீக்குசிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க/
பட்டமெல்லாம் தரனுமூங்குறீங்க வாங்கிக்கிறேன் தோழமையே மிக்க நன்றி..
/TamilNenjam கூறியது...
பதிலளிநீக்குகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்/
முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம் தொடர்ந்து வாருங்கள்..