நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காணாமல்போனது


கார்மேகங்கள் என கருப்பாய் கறுங்கூந்தல்
முட்டுக்கால்களை தொட்டது அன்று
கழுத்துக்கீழ் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது
நாகரீகத்தின்  கத்தரிக்கோலுக்கு இரையாகி இன்று

இவர்கள் காசுகொடுத்து கத்தறிக்கிறார்கள் மாடலுக்கு
அதுகூடை கூடையாய் விலைபோகிறது வெளிநாட்டிற்கு

பளபளக்கும் பட்டும் தளைய
தளையப்பின்னலும்தான் தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப்கட்டும் பேண்ட்சர்ட்டும் வெளிநாட்டவரின் மறுஉருவம்

ஆண்கள் அனைத்திலும் முழுமை என்று -
தற்போதுமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்-ஆனால்
பெண்களின் ஆடை குறைவதுபோலவே
குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்


நாகரீகம்  மேலோங்கி கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும் பல நிறங்களாகி விட்டது
அடிபெண்ணே அந்திவானம் சிவக்கலாம்
ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு

உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு
அழகுமேனிக்கு  சிகைஅலங்காரம்
செய்வதுதவறில்லை அழகே -அதற்காக
சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

28 கருத்துகள்:

  1. //பெண்களின் ஆடை குறைவதுபோலவே
    குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்//

    அருமை....என்னத்த சொல்லறது.... கலக்குங்க...


    http://thisaikaati.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. என்னத்த சொல்ல. மேல்நாட்டு மோகம், கலாச்சார சீரழிவுன்னுதான் சொல்லனும்.

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா நீங்கள் சொல்லியிருக்கிறது கரெக்ட் தான் , கத்திரிகோல் வைக்காமலே . குறைந்து போகும் என் போன்றவர்கள் என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
  4. //அந்திவானம் சிவக்கலாம்
    ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு//

    ஒப்பீடு அருமை

    பதிலளிநீக்கு
  5. //ஆண்கள் அனைத்திலும் முழுமை என்று -
    தற்போதுமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்-ஆனால்
    பெண்களின் ஆடை குறைவதுபோலவே
    குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்//

    சரிதான்...கேட்டால் நாகரீகம் மண்ணாங்கட்டி என்கிறார்கள்.

    //அதற்காக
    சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..//

    இது மேட்டரு....

    நல்ல இடுகை....

    பதிலளிநீக்கு
  6. //ஆனால்
    பெண்களின் ஆடை குறைவதுபோலவே
    குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்
    //

    சரியா சொன்னீங்க....இப்போதெல்லாம் ஆண் யார் பெண் யார் என்ற சந்தேகம் பலருக்கு...

    பதிலளிநீக்கு
  7. கடைசி போட்டோ பார்த்து பயந்து போயிட்டேன். :)

    இயற்கையிலேயே தற்கால பெண்களின் நீளமான முடியை இழந்து வருகிறார்கள். உணவு மற்றும் அலங்காரத்திற்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்டகளும் காரணமாக இருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  8. பெண்களின் அழகே கூந்தல் தான்.நாகரீகம் என்ற பேரில் அழகை இழக்கும் இவர்களை என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
  9. /ரோஸ்விக் கூறியது...
    அருமை....என்னத்த சொல்லறது.... கலக்குங்க.../

    வாங்க ரோஸ், தாங்களின் முதல் வருகைக்கும், கலக்கலான கருத்துக்கும் மிக்க நன்றிங்க,

    என்னத்தா சொல்லுறதுன்னுதான் இத்த சொன்னோமுங்க..

    மீண்டும் மீண்டும் வருக...

    பதிலளிநீக்கு
  10. /S.A. நவாஸுதீன் கூறியது...
    என்னத்த சொல்ல. மேல்நாட்டு மோகம், கலாச்சார சீரழிவுன்னுதான் சொல்லனும்/

    எல்லாம் நவநாகரீக பேஷனாம்,
    என்னத்தசொல்லரதுன்னே தெரியல,
    ஏதோ நம்மால முடிஞ்சது இதுதான் கொஞ்சூண்டு புத்திமதி..

    பதிலளிநீக்கு
  11. /sarusriraj கூறியது...
    மலிக்கா நீங்கள் சொல்லியிருக்கிறது கரெக்ட் தான் ,

    ரொம்ப நன்றி சாருக்கா.

    /கத்திரிகோல் வைக்காமலே . குறைந்து போகும் என் போன்றவர்கள் என்ன செய்வது./

    அது நம்மோட உணவு பழக்கமுறைகள், அப்புறம் பொலியூஷன், பராமறிக்கும் முறை எல்லாம் மாறிபோவதால் சிலருக்கு இதுபோன்ற பிரச்சனைகள்.

    சாருக்கா, எங்களுக்கும் இந்தநாட்டு தண்ணீரால் முடி நிறையவே கொட்டிப்போச்சிக்கா, இருந்தாலும் பத்திரமா பாத்துக்கொள்றோமுள்ள இருப்பதையாவது பாதுகாக்கனும்முன்னு.

    ரொம்ப நன்றி சாருக்கா..

    பதிலளிநீக்கு
  12. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    //அந்திவானம் சிவக்கலாம்
    ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு//

    ஒப்பீடு அருமை/

    மிக்க நன்றி ஷஃபி.

    பதிலளிநீக்கு
  13. //பெண்களின் ஆடை குறைவதுபோலவே
    குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்//

    இரண்டும் நல்லதுக்கு இல்லை..

    :(

    பதிலளிநீக்கு
  14. /சரிதான்...கேட்டால் நாகரீகம் மண்ணாங்கட்டி என்கிறார்கள்/

    அந்த மண்ணாங்கட்டின்னுதான் சொல்லுறாங்க.

    //அதற்காக
    சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..//

    /இது மேட்டரு..../

    அப்ப நல்ல விசயந்தான் இது

    /நல்ல இடுகை..../

    ரொம்ப மகிழ்ச்சி பாலாஜி..

    பதிலளிநீக்கு
  15. /சரியா சொன்னீங்க....இப்போதெல்லாம் ஆண் யார் பெண் யார் என்ற சந்தேகம் பலருக்கு.../

    நிஜம்தான் புலிகேசி நானும் நிறையமுறை ஏமார்ந்திருக்கேன், அட அங்கே போறது பெண்ணான்னு..அப்புறம் பார்த்தா ஆண்தான். என்னத்தச்சொல்ல கலிகாலமாங்கோ..

    நன்றி புலிகேசி..

    பதிலளிநீக்கு
  16. /கடைசி போட்டோ பார்த்து பயந்து போயிட்டேன். :)/

    பேயோன்னு தானே .:]/

    இயற்கையிலேயே தற்கால பெண்களின் நீளமான முடியை இழந்து வருகிறார்கள். உணவு மற்றும் அலங்காரத்திற்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்டகளும் காரணமாக இருக்கலாமோ?

    அதுவும் காரணமாக இருக்கலாம் பீர்,

    கொட்டிபோவதென்பது வேறு,
    முடியை வெட்டிக்கொ”ல்”வதுதானே கொடுமை..

    பதிலளிநீக்கு
  17. /பெண்களின் அழகே கூந்தல் தான்.நாகரீகம் என்ற பேரில் அழகை இழக்கும் இவர்களை என்ன சொல்வது?/

    என்னசொல்வது நாமாககிடந்து வெட்டியாய் புலம்புவது, நிஜம்தானே நிஜாம்...

    பதிலளிநீக்கு
  18. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    //பெண்களின் ஆடை குறைவதுபோலவே
    குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்//

    இரண்டும் நல்லதுக்கு இல்லை..

    :(//

    இரண்டுமே நல்லதுகில்லையின்னு நாமசொன்னா கிருக்குன்னு சொல்லுவாக... இல்ல வசந்த்:]

    பதிலளிநீக்கு
  19. கூந்தல் நீளமாக இருக்கும் பெண்கள் என்றால் மிகவும் புடிக்கும். ஆனால் இப்ப அடர்த்தியான கூந்தலை உள்ள பெண்களைப் பார்ப்பது மிகவும் அரிது. எனக்கு ஏன் மிகவும் நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களைப் பிடிக்கும் என்றால், என் மண்டையில் தான் ஒன்றும் இல்லை(அறிவும் சேர்த்து) அவங்களுக்காவது இருகின்றேதே என்றுதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. //கடைசி போட்டோ பார்த்து பயந்து போயிட்டேன். :)/

    பேயோன்னு தானே .:]//

    அவ்வ்வ்... :)

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப சரியாச் சொல்லியிருக்கீங்க மலிக்கா. கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  22. உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
    தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு

    Alakiya... Adarntha.... Alai Alaialaiyana... varikaluku poruthamai Koonthal padem Woormpa Alaku...

    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  23. /பித்தனின் வாக்கு கூறியது...
    கூந்தல் நீளமாக இருக்கும் பெண்கள் என்றால் மிகவும் புடிக்கும். ஆனால் இப்ப அடர்த்தியான கூந்தலை உள்ள பெண்களைப் பார்ப்பது மிகவும் அரிது./

    ஆமாம் பித்தனின் வாக்கு, இப்போதெல்லாம் இதுபோன்று பார்ப்பது மிக அரிது, காலத்தின் கோலம் ஒருபுறம் காலத்தின் மாற்றங்கள் மறுபுறமுன்னு சேர்ந்துகொண்டு கொட்டியும் வெட்டியும் போகிறது..

    எனக்கு ஏன் மிகவும் நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களைப் பிடிக்கும் என்றால், என் மண்டையில் தான் ஒன்றும் இல்லை(அறிவும் சேர்த்து) அவங்களுக்காவது இருகின்றேதே என்றுதான். நன்றி./

    ஹ ஹ ஹ, இப்படியெல்லாம் சொன்னா நாங்க அறிவில்லைன்ன நம்பிடுவோமா, ரொம்ப இருக்கிறவங்களின் தன்னடக்கம்தானுங்க இது..
    நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  24. /பீர் | Peer கூறியது...
    //கடைசி போட்டோ பார்த்து பயந்து போயிட்டேன். :)/

    பேயோன்னு தானே .:]//

    அவ்வ்வ்... :)//

    எப்பயிலேர்ந்து இந்தப்பழக்கமெல்லாம்..
    இதையும் வடிவேலு பாணியிலே சொல்லுங்க பீர்...


    /Mrs. Sabira Syed கூறியது...
    உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
    தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு

    Alakiya... Adarntha.... Alai Alaialaiyana... varikaluku poruthamai Koonthal padem Woormpa Alaku.../

    மிக்க நன்றி சாபிரா சையத்..

    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  25. /சுந்தரா கூறியது...
    ரொம்ப சரியாச் சொல்லியிருக்கீங்க மலிக்கா. கவிதை அருமை//

    தாங்களின் வருகை நல்வரவாகட்டும் சுந்தரா, தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக..

    பதிலளிநீக்கு
  26. கத்தரிக்கோல் இல்லாமலே..
    கத்தரிக்கிறீங்க மேலை நாட்டு நாகரீகத்தை...வாவ்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது