நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதை எழுதுவது எப்படி?



இக்கவிதையில் எதுவும் குறையிருக்கா? ஏன் கேட்கிறேன் என்றால் அதுக்கும் காரணமிருக்கு.
கவிதைகள் கட்டுரைகள் வெளியிடும்  ஒருபிரபல .காமிற்கு எல்லாரும் அனுப்புகிறார்களே நாமும் அனுப்புவோம் என கவிதைகள் பல அனுப்பியுள்ளேன். அத்தளத்தில் சிலகவிதைகள் வெளியாகி உள்ளது.
அதில் 3.4 கவிதைகள் ”நாட் செலக்டட்” என திரும்பி வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை சரி ஏன் என தெரிந்துகொள்ளலாமா என மெயில் அனுப்பினேன். பதில் வந்தது மிகவும் ஒன்று பதில் வந்தது  ”பழைய நடைக் கவிதையிது” என
என்னடாயிது கவிதை நடையில் பழையது இல்லாமலா புதியது தோன்றின என நினைத்துக்கொண்டு. சில நாட்கள் கழித்து அந்த கவிதை வேறு தளங்களுக்கு அனுப்பினேன் அங்கே அவை வெளியானது.அந்த கவிதைகள் இவைகள்தான் அடக்கம்      அத்தனைக்கும் ஆமெனில். தற்போது இங்கே வெளியிடப்பட்டிருக்கும் காலம்யாவும்..கவிதையும் சேர்த்து.

முதல் தடவை ரிஜெக்ட் செய்ததும் சோர்ந்துவிடாமல் மீண்டும் மீண்டும் அதேயிடத்திற்கு அனுப்பினேன். ஏன் தெரியுமா? நமது எழுதுக்கள் சரியில்லையா?  அல்லது எண்ணங்களில் எழும் வரிகள் சரியில்லையா? அல்லது நம்முடையது கவிதையே இல்லையா? என்ற எண்ணம் எழுந்ததாலும். என்னமாதரியான கவிதைகளை செலக்ட் செய்கிறார்கள் என தெரிந்துகொள்ளவும்தான்..

இக்கவிதை அனுப்பியபோதும்  அதே பதில் வந்ததும் மீண்டும் மெயில் எழுதினேன்.
//sorry not selected//என்பது ஏனென தெரிந்துகொள்ளலாமா?
கவிதையை எப்படி எதிர்பார்கிறீர்கள். இங்கிலிஸ் கலந்து எழுதும் கவிதைகளையா? அல்லது வரிகளை உடைத்துபோட்டும் எழுதும் கவிதைகளையா? விபரம் தந்தால் அதற்கு தகுந்தார்போல் எழுதலாமில்லையா?
விபரம் தருவீர்களா?

எனக்கேட்டு எழுதினேன் இதுவரை பதில்லை.

நான் யாரையும் குறைசொல்லவில்லை. இங்கிலீஸை தமிழாக்கி கலந்த கவிதைகளுக்கு உள்ள மதிப்பு, தமிழைமட்டும் இழைத்து எழும் கவிதைகளுக்கு கிடைப்பதில்லையோ! என்ற எண்ணம் தோன்றுகிறது. [நான் எழுதுவதெல்லாம் கவிதையென சொல்லவில்லை இருந்தபோது கவிதையென நினைத்து எழுதுவதால் இப்படி தோன்றியிருக்கலாமோ] நிறையபேர்களின் ஆதங்கம் இதுதான். அதைதான் நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்தால் எப்படி எழுதினால் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது ஏற்றுக்கொள்வாகள் என தெரிந்துகொள்ளலாமில்லையா?
சொல்லுவீங்கதானே!

அப்படியே கவிதை எழுதுவது எப்படி?ன்னு யாராவது சொல்லிதந்தால் அந்த வகுப்பில் முதல் மாணவியாக நான் சேர்ந்துகொள்வேன்..
அட்ரஸ் ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்கிலீஸில் கேட்டாதான் சொல்லுவீங்கன்னுதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எதிரி வேறெங்குமில்லை!



உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அட எல்லாம் உங்களாலதான்..

 இது காவியத்திலகம் தந்தை. ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியீட்டு விழாவில் என் எழுத்துக்கள் மூலம் என்னையும் கெளரவப்படுத்தும் விதமாக சகோதரர். சங்கமம் தொலைகாட்சி நிறுவனர். திரு கலையன் ரபீக் அழைத்தபோது அதை சற்றும் எதிர்பார்க்காத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   சிறுகதை எழுத்தாளர் தந்தை சேக் சிந்தா மதார் அவர்கள் கையால் பரிசு வழங்கப்பட்டது. சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

பதிவுலகம் இப்படியெல்லாம் கூட செய்யுமா? என்ன செய்யுமா? இதோ செய்திருக்கே! கீழேயிருக்கும் விருதுகள் நம்ம நீரோடைக்காக வழங்கிய விருதுகள்..ஹா ஹா என்னமோ ஏதோன்னு நினைச்சீங்களா! என்னா ஒரு பில்டப்பு..

நம் எழுத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ளவும். நம்முள் எழும் எண்ணங்களுக்கு ஊக்கம் கொடுத்து இன்னும் பல நல்ல கருத்துகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கொடுக்கப்படும் இதுபோன்ற விருதுகள் வரவேற்கப்படவேண்டியவைகள்..
இது நம்ம அப்சரா இல்லம் அப்சரா அவர்கள் தந்த விருது


இது நம்ம இனிய இல்லம் ”சினேகிதி” ஃபாயிஜா வழங்கிய விருது.
 இது நம்ம சமையல் அட்டகாசம். ஜலீலாக்கா கொடுத்த விருது.

சரி சரி இதோட நிறுத்திக்கிவோம். அப்புறமால மத்தவைகளை பகிர்ந்துகலாம்.விருதுகளை வழங்கிய பேரன்பு நிறைந்த மனங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

அட  என் எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகட்டும் விருதுகளாகட்டும் பரிசுகளாகட்டும் அனைத்தும் உங்களால்தான்.அதனால் இங்கு வருகைதரும் அனைவருக்கும்.மற்றும் நெஞ்சார வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்ன இவ்வளவு பில்டப்பு கொடுத்துபுட்டு  நீ யாருக்கும் கொடுக்கலையான்னு கேட்கிறீங்களா ம்ஹூம் இதெல்லாம் எனக்கு மட்டும்தான்.ஒத்தவங்க தந்தத மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடாதுன்னு எங்கவீட்டு எலி சொன்னுச்சி. அதனால நாங்களே தயார் செய்து புது விருது வழங்குவோம் கூடியவிரைவில்..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது