நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இவைகளின் காரணகர்த்தா!




உணர்ச்சிக் கேணிக்குள்
ஊறிக்கொண்டேயிருக்கும் கழிவுகள்
உடற்கேணியின் வழியே
கொப்பளித்து ஒழுகும் சீழ்களாய்!

விரசங்களோடு
சரசங்கள் செய்ய துடிக்கும்
விசித்திர உடலுக்குள்
வித வித மாற்றங்கள்!

காரணங்கள் புரியாத
செயல்களுக்கு
காரணங்களை தேடியலைந்து கலைக்கும்
தெருநாய் செய்கைகள்!

உடலுண்ண
உள்ளம் கொல்லும்
மாயைகளாய் மாறிபோகும் மனதுக்கு
பரிந்துரைக்கும் உள்மன விகாரங்கள்!

பாவசெய்கைகள்கூட
புண்ணியமாய் கருதும்
காலத்தோடு
ஒத்துப்போக நினைக்கும் நியாயங்கள்!

கூவமாகிக் கிடக்கும்
சாக்கடைக்குள் குளித்தெழுந்து
சந்தனமாய்
உணர்த்தித்திரியும் உடற்கட்டுகள்

வேலிதாண்டநினைக்கும்                                                                             தாலிகளுக்கு
உடந்தையாகித் திரியும்
தயாள குணங்கள்!

"இவைகளின் காரண கர்த்தா"
எங்கு நோக்கினும்
மோக யாகம்!
எதை நோக்கினும்காம ருத்ரம்!

மோகத்தீயில்

வேக நினைக்குது பல தேகம்
காம ருத்ரதில்
காணாது போகும் கலாச்சாரம்..


-----------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

  1. எதார்த்தங்கள்...
    எதார்த்தமான வரிகளுடன்...


    ஆனால்...

    நாம்தான் மாமிசப் பிண்டமாச்சே...
    இதெல்லாம் எங்க எங்க மனசுல நுழைச்சு... நாங்க திருத்தப்போறது?

    பதிலளிநீக்கு
  2. உண்மை வரிகள்...

    பாழாப்போக வைப்பதற்கு ஆணி வேர் இவைகள் தானே...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நியாயமான ஆதங்கங்களுடன் கூடிய அருமையான வரிகள்.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. இவைகளின் காரண கர்த்தா அருமை....

    வாழ்த்துக்கள் அக்கா....

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது