நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணத்தருவாயிலும்!

 
 
எனது கம்பீரம்
மரணத் தருவாயிலும்
மனிதருக்காக மண்டியிடாது
எனது தலை!
 
என் தீண்டலில்
உயிர்பிக்கும் ஜோதி
என் தீயில்
உருக்குலையும் பல ஆவி!
 
எனது தலைகவசமே
என்னை அழிக்கும் ஆயுதம்
அதனால் நான்
என்றுமே நிராயுதம். 
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

7 கருத்துகள்:

  1. அருமை !.மிகச் சிறப்பான வரிகள் தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    பதிலளிநீக்கு
  3. எப்படிப்பா இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க.. அசத்துறீங்க போங்க..

    இன்பி தீக்குச்சியை பார்த்தாலே உங்க நினைவு வரப்போகுது.. அருமை மலிக்கா..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. ஓ....தீக்குச்சியா.... உங்கள் கவி வரிகளிலிருந்து ஒரு துரும்பும் தப்பாது போலயே ;)))!!

    /எனது தலைகவசமே என்னை அழிக்கும் ஆயுதம் /// வித்தியாசமான வரிகள்!!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் சொந்தகளே உங்களின் கருத்துகளென்னும் உரசல்கள்தான் என் எண்ணத் தீ எழுதாக காரணமாக இருக்கிறது.. தங்கள் அன்பின் பரிமாற்றங்களை ஆயுள்வரை எதிர்பார்கிறேன்..

    என்றும் உங்கள்
    அன்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது