நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

  1. தங்கள் கவிதையில் சொன்னது அத்தனையும் உண்மை...!

    பதிலளிநீக்கு
  2. எந்நிலையும் எவர்க்கும் எப்போதும் நேரலாம். மறந்தும் பிறரை காயப்படுத்தாமல் வாழ்தலே நல் (நம்) வாழ்க்கை. நன்று சொன்னாய் தங்கையே. அருமை.

    பதிலளிநீக்கு
  3. குருமூர்த்தி.29 ஜூன், 2012 அன்று AM 7:15

    எந்நிலையிலும் தனக்கும் வரும்
    என்று உணர்வோராய்
    மன ஊனமுற்றோரை
    மனம் நோகும்படி செய்யாதிருப்பது
    மனித தர்மமன்றோ!//

    unmaithaan sakoothai. nalla kavithai..

    பதிலளிநீக்கு
  4. நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு!.. ஊனம் என்பது பார்பதற்கு வேடிக்கை அல்ல வேதனை என நினைப்பவர்களே மனிதர்களும் ஆவார்கள்.மிக்க நன்றி அருமையான இப் பகிர்வுக்கு .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது