நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அப்படியும் இப்படியும்..



 

காகம் கரைகிறது
இருள் கலைகிறது
கிழக்கு வெளுக்கிறது
வெளிச்ச அழைப்புகள் பிறக்கிறது
செவ்வானம் மறைந்தபடியே சேதி சொல்கிறது
சேவல்கூவி விடிந்ததை சொல்கிறது
விடிந்த பொழுது
சிலருக்கு விடியலாய்
சிலருக்கு வெருண்டதாய்
சிலருக்கு இன்பமாய்
சிலருக்கு துன்பமாய்
சிலருக்கு மகிழ்ச்சியாய்
சிலருக்கு இகழ்ச்சியாய்
விடியலென்னவோ
எல்லோருக்கும் ஒன்றுதான்
ஆனாலதில்
உணரப்படும் மனக்களுக்குத்தான்
வித்தியாசங்கள்தான் வெவ்வேறு!...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. வாங்க சகோ தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. புதிய வரவுகள்:
    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை
    சிலருக்கு விடிகிறது
    பலருக்கு இருள் தொடர்கிறது
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நல்லாத்தான் இருக்கு...!

    ஆனா...!

    இக்காலத்து சேவல் நண்பகல் இரண்டு மணிக்கு கூவுதுங்க...!

    அதுக்கு என்னாங்கோ அர்த்தம்...!

    காலக்கொடுமைதானுங்கோ...!

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை...
    விடியல் ஒன்றுதான்...
    மனங்களின் விடியல்தான் மாறுபட்டவை.
    நல்லாயிருக்குக்கா...

    பதிலளிநீக்கு
  7. //உணரப்படும் மனக்களுக்குத்தான்
    வித்தியாசங்கள்தான் வெவ்வேறு!...//

    உண்மை....

    எனது தளம் இனி www.bhageerathi.in சகோ. இனி அங்கதான் எழுதுவேன்

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்கள் மூலம் என் எண்ண ஊற்றில் கவிநீர் சுரக்கவைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நீரோட்டமான நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  10. //காஞ்சி முரளி கூறியது...

    நல்லாத்தான் இருக்கு...!ஆனா...!

    இக்காலத்து சேவல் நண்பகல் இரண்டு மணிக்கு கூவுதுங்க...!//

    எச்சூஸ்மி.. அது முதலில் அதிகாலையில் கூவிகின்னுதேன் பின்னே நண்பகலிலேயும் கூவுது.. ஹெ ஹெக்கே ஹெக்கே..

    பதிலளிநீக்கு
  11. சிலருக்கு இன்பமாய்.. சிலருக்கு துன்பமாய்... வாழ்க்கை பலவிதமாய் முகம் காட்டியபடிதான் இருக்கிறது. ரசிக்க வைத்த அருமையான கவிதை,

    பதிலளிநீக்கு
  12. moncler
    Blogger: நீரோடை - ??????????????

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது