நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதியதை தா!


புத்தம் புதிதாய் பூத்திருக்கும் புத்தாண்டே
உன்னை உலகமக்களில் ஒருத்தியாக
வரவேற்க வந்துள்ளேன்
அப்படியே! இரண்டாயிரத்து பத்து
ஆண்டுகள் செய்தவைகளத்தையும்
அறிவுதெரி[ளி]ந்த நாள்முதலாய்
பார்த்திருந்து கேட்டிருந்ததை
நினைவூட்டவும் நினைக்கிறேன்

கடல் காவுகேட்டதால்
சுனாமி என்ற பெயரில்
மனிதபொட்டலங்கள் மண்ணுக்குள்
கயவர்களின் கட்டவிழ்ப்பால்
கற்புகள் சூறையாடுதல்
பூவுக்குள் பூகம்பம்
சூராவளியாகும் சூன்யம்
அழகிய தளிர்களை
அரக்கர்களே மேயும் அவலங்கள்

மாலேகன் குண்டு வெடிப்பு
மும்பை குண்டுவெடிப்பு
கோத்ரா ரயில் எரிப்பு
குஜராத் இனப்படுகொலைகள்
கொழும்பில் கொடுமைக்கள்
இயற்கையின் சீற்றங்களென
எண்ணிலடங்கா துயரச் சுவடுகள்

அறிவிழந்து ஆடைகுறைந்து
தன்னையிழந்து
தரங்கெட்டுப்போகும்
மனிதர்கள் ஒருபுறம்
உண்ண உணவில்லமல்
உடுத்த உடையில்லாமல்
தவிக்கும் மக்கள் ஒருபுறம்
அத்தனையும் ஒட்டுமொத்தமாய் சுருட்டி
உலையில் போடும் கூட்டம் மறுபுறம்

இன்னும் உலகில்
எத்தனை எத்தனையோ
மனம் தாங்கமுடியாத மரணங்கள்
இப்படி ஒவ்வொரு வகையிலும்
கூட்டம் கூட்டமாய்
கொல்லை போகிறது மனித இனம்
இன்னும் எவ்வளவோ
சொல்லிக்கொண்டு போகலாம்

உலகில் நடக்கும் ஒட்டுமொத்த
வருத்ததினையும் தெரிவித்து விட்டேன்- இனி
வரப்போகும் காலங்களிலாவது
உலகம் ஒற்றுமையாகயும் அமைதியாகவும்
உலகமக்கள் நலமாகவும் வளமாகவும்
வாழ வழிவகுத்து கொடுக்க வேண்டுகிறேன்

அகிலத்தை ஆளும் இறைவனால்
சகலத்தையும் சரிசெய்யமுடியுமென்ற
நம்பிக்கையோடு
அனைவரையும் அன்போடும் மகிழ்வோடும்
அளவிள்ளா சிறப்போடும் வாழவைக்க
எல்லம் வல்ல இறைவனிடம்
அனைவரும் வேண்டுவோமாக....

தமிழ்குடும்பத்தில் நான் 24 -12 -2009 அன்று இணைந்தேன்
இணைந்த அடுத்த வராம் 2010. அன்று  தமிழ்குடும்பத்திற்காக
நான் எழுதியகவிதையிது.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

13 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
    **********************************************************************

    புத்தம்
    புதுப்
    பூவாய்ப்
    பூக்கும்.... இப்
    புதிய ஆண்டில்....

    பழையன கழிதலாய் (நம் துன்ப, துயர, கஷ்டங்கள் போன்றவை)
    புதியன புகுதலாய்... (மகிழ்ச்சி, இன்பம் போன்றவை)
    புத்துணர்ச்சியுடன்....
    புதுப்பொலிவுடன்
    பிறக்கும்... இப்
    புத்தாண்டில்... (2011 ல்)

    எல்லா வளமும்... நலமும்... பெருமையும்... இன்பமும்... கிடைக்க... பெருக...

    என் அன்பு "கவிஞர் மலிக்கா... மற்றும் அவர் குடும்பத்தார்"
    மற்றும்
    "பதிவுலக நண்பர்கள்"...
    என்னைப் போல "பின்னூட்டமிடும் தோழர்கள்" அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும்...

    "என் இதங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்".....

    வாழ்த்துக்களுடன்....
    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    ******
    கவிதை அருமைதான் கவிஞர் மலிக்கா....

    கடந்துபோன கசப்புக்களை...
    மறந்துபோன சோகங்களை...
    ஏன்?
    இந்த நன்நாளில் நினைவுபடுத்த வேண்டுமா...?

    இதுபோல் இனி
    நடக்காது...!
    நடைபெறாது...! நடக்க்கவும்கூடாது...!

    பதிலளிநீக்கு
  3. அன்புடன் மலிக்கா அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //அகிலத்தை ஆளும் இறைவனால்
    சகலத்தையும் சரிசெய்யமுடியுமென்ற
    நம்பிக்கையோடு
    அனைவரையும் அன்போடும் மகிழ்வோடும்
    அளவிள்ளா சிறப்போடும் வாழவைக்க
    எல்லம் வல்ல இறைவனிடம்
    அனைவரும் வேண்டுவோமாக....//
    We too...

    பதிலளிநீக்கு
  5. கவிதைகளின் கருத்துக்கள் அற்ப்புதம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நடாசிவா தமிழ்க்கிறுக்கன்2 ஜனவரி, 2011 அன்று PM 8:56

    நம்பிக்கை மகிழ்ச்சி அன்பு ஆதரவு
    வேண்டுவதும் அதுவே ........

    பதிலளிநீக்கு
  7. மல்லிகாஜி... கேப்பி நியூ இயர்...

    பதிலளிநீக்கு
  8. கவிதை நல்லாயிருக்கு.
    2011 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சகோ மலிக்கா அவர்களே,அஸ்ஸலாமு அலைக்கும்,
    இனிய புத்தாண்டை நீங்கள் சென்ற வருடங்களின் சோகங்களை முன்னிருத்தி,இனி அவையல்லாத ஆண்டாக வேண்டி வரவேற்றது சிறப்பு.

    //அறிவிழந்து ஆடைகுறைந்து
    தன்னையிழந்து
    தரங்கெட்டுப்போகும்
    மனிதர்கள் ஒருபுறம்//

    பிடித்த வரிகள்...


    //உண்ண உணவில்லமல்//
    திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  10. 2011 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிறப்பான வருடமாக அமையந்து எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    கவிதைகள் அருமை

    பதிலளிநீக்கு
  11. கவிதை அருமைங்க..

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகக்ள்
    மலிக்கா

    அருமையான் கவிதை.

    பதிலளிநீக்கு
  13. 2011 டிசைன் பண்ணி உள்ளே கவிதை சூப்பர்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது