நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தடுமாற்றம்!


சுசிலா வழக்கம்போல் கணினியில் அமர்ந்தபடி தன் வேலைகளை தொடர்ந்தாள்.கைகள் டைப் செய்துக்கொண்டிருந்தபோதும் ஒருகணம் மனம் அவனை நினைத்தது.

ஒரு ஸ்டெனோவா அலுவலகத்தில் இருக்கும் சுசிலாவுக்கு ஒருமுறை சாட்டிங்க வழியே ஹரி என்ற நண்பனின் அறிமுகம் கிடைக்கவே தினமும் அவனிடம் 10 நிமிடமாவது உரையாடிக்கொள்வதுண்டு.
இதுவே 2 ,மாதங்களாக தொடர்ந்தது. தோழமைகளான நட்பு சற்றுவிரிவடைந்து காதலானது.

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை இருந்தபோதும் நெருக்கம் கூடியது, வார்த்தைகள் தேன்தடவி விளையாடியது, வானவில்லின் வண்ணங்களை கண்முன்கொண்டுவந்து கொட்டியது.

இருவருமே திருமணமானவர்கள்.
ஆனபோதும் ஏதோஒன்று இருவரையும் இணைத்துப் பிணைத்தது.
இது இருவருக்குமே தவறு என தெரிந்தபோதும் ஏனோ மனம் பிடிவாதமாய் தவறில்லையென வலுக்கட்டாயம் செய்தது.

நாட்கள் செல்லச் செல்ல மனம் பதைபதைப்புக்குள்ளாகியது
ஒருமுறை கணினிவழியே பேசிக்கொள்ளவிட்டாலும் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தாள்.

ஒருநாள் தன் அன்புக்கணவன் சுந்தரிடம் இதைசொல்லிவிடலாமா என எண்ணிக்கொண்டே அருகே அமர்ந்தாள்.
குடும்பத்தின் சிலசூழல்களை அவன் சொல்லத்தொடங்கியதும் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே அவன் மார்பில் முகம்புதைந்து அழுதாள்.

ஏன் ஏன்னென்று அணைத்தபடி அவன் கேட்டும் சொல்லமுடியாமல் கண்ணீரை துடைத்தபடி ஒன்றுமில்லைங்க என சொன்னவளாய் மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும்
அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்.
தன்வாழ்க்கையில் எக்குறையும் இல்லாமல் வாழ்ந்துவரும்
நாம் எதில் சரிக்கினோம்?
எதற்கு மற்றவரின் வார்த்தையில் மயங்கினோம்?
வார்த்தைகள் அத்தனை வலிமையானதா?
தவறிட இருந்தோமே!
நல்வாழ்க்கையை தொலைக்க நினைத்தோமே!
என்று எண்ணிக்கொண்டே
தன்னையே சற்றுநேரம் தாழ்ந்தவளாய் நினைத்தாள்

மனம்போனபடி வாழ்வதா வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதானே வாழ்க்கை, எப்படிவேண்டுமென்றாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்லவே!
என்பதை அவள் மனம் அவளுக்கு உணர்த்தியது.

மறுநாள் காலை ஒருமுடிவெடுத்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள், கணினியை கண்டதும் அவன் நினைவுவர அப்படியே புறந்தள்ளிவிட்டு ஆன்மாவுக்குள் ஆண்டவனை நினைத்தாள்
தவறுதலாக தவறை செய்துவிட நினைத்தேன், அதனை தவறென்று உணர்த்தி, என்னை உன் தண்டனையிலிருந்த காப்பாற்றிய கடவுளே! உனக்கு கோடான கோடி நன்றி
என்று நெஞ்சம் உருக கண்ணீர் வழிந்தது.

உள்ளம் புயலுக்குள் சிக்கிமீண்ட உணர்வை உணர்ந்தாள்
மனம் இப்போது தென்றலின் சுவாசத்தை உள்வாங்கியபோது
நெஞ்சுக்குள் நெகிழ்ச்சியாய் சில கவிதை துளிகள் தெறித்தது..


தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
தவறிழைத்துக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை

மனமே...!
நீ தவறிழைப்பது இயல்பு - அதுவே
தொடர்வது அழகற்ற மரபு....

மனிதன்
தவறிச்செய்யும் சிறு குறும்பு - அதுவே பின்னால்
யானைக் காதில் புகுந்த எறும்பு....

தவறை செய்து விட்டபின் மனமே....
தவறுவதிலிருந்து திரும்பு - அதுவே
உனக்கு நீயே கொடுக்கும் மருந்து....

மனசாட்சியோடு வாழ்வது சிறப்பு....
அதை துறந்து வாழ்வது - உனக்கு நீயே
தேடிக்கொள்ளும் இழப்பு

மனம்போல் வாழ்வதா அழகு - உன்
மனசாட்சியில் வேண்டும் நலவு -அதனால்
மனதோடு
மல்லுக்கு நின்று பழகு...

 
டிஸ்கி// இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம்.
அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா?
 இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே? எதுவென்றாலும் சொல்லுங்கள்.

கதைக்குள் கவி என்று. என்னுடைய இந்த குட்டிக்கதை கவி. 
சார்ஜாவில் இருக்கும் சீமான் அமைப்பின் 
ஆண்டுமலர் புத்தகத்தில் வெளியாகியுள்ளது . அதில்,
இதிலுள்ள பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு வெளியாகியிருக்கிறது.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

48 கருத்துகள்:

  1. //மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு//
    தவறு செய்தவன் அந்த தவறை தானே திருத்தி கொள்ளவேண்டும்.
    மகத்துவமான இந்த கருத்தை கவிதையால் மனம் நெகிழ சொல்லி விட்டிர்கள்.

    பதிலளிநீக்கு
  2. க‌தையும் அதோடு சேர்ந்த‌ க‌விதையும் அழ‌கு.... ர‌சித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மனிதன்
    தவறிச்செய்யும் சிறு குறும்பு
    அதுவே
    பின்னால் யானைக் காதில்
    புகுந்தஎறும்பு


    .... super! ஆண்டு விழா மலரில் வெளியான உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. //மனிதன்
    தவறிச்செய்யும் சிறு குறும்பு
    அதுவே
    பின்னால் யானைக் காதில்
    புகுந்தஎறும்பு//

    இதில் சிறு ’’துரும்பு’’ என்று வந்திருந்தால் இன்னும் சிறப்பு .

    கவித டி ஆர் ரேஞ்சிக்கு பிண்ணி பெடலெடுத்துட்டீங்க. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. கதைக்குள் கவிதை
    சிறப்பாக இருக்கிறது,
    வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. அற்புதமாக உள்ளது, தவறு செய்வது தவறில்லை, ஆனால் அதை உணர்ந்து திருந்தாமல் இருப்பது தவறு. இதைக் காட்டிலும் பெரிய தவறு செய்த தவறை நியாயப்படுத்துவது. கதையும்,கதைக்குள் கவிதையும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  7. நாம் எதில் சரிக்கினோம்?
    எதற்கு மற்றவரின் வார்த்தையில் மயங்கினோம்?
    வார்த்தைகள் அத்தனை வலிமையானதா?
    தவறிவிட இருந்தோமே!
    நல்வாழ்க்கையை தொலைக்க நினைத்தோமே.//

    அதுதானே பலநேரம்புரியவில்லை.
    தவறுகளின் பொறுப்புகு முழுக்காரணமே இந்த மனதுதான் அதை கட்டுப்படுத்த தெரிந்துவிட்டால் போதும்.


    மிகத்தெளிவான கதையும் கவிதையும்.வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  8. மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும்
    அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்/

    மிக மிக சரியே.

    மனம் குரங்காகும் நேரத்தில் மனிதன் தன்னை மறக்கிறான்.
    அழிவில் முடியும்போது தனனை இழக்கிறான்..

    பதிலளிநீக்கு
  9. தவறிழைக்காத மனிதறென்று
    எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர்
    மனிதரில்லை


    மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு..//

    கவிதைக்குள் பொதிதுள்ள அறிவுரைகள் மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  10. தவறிழைக்காத மனிதறென்று
    எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர்
    மனிதரில்லை


    மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு.//

    kavithaiyum athan poruLum mika arumai.

    பதிலளிநீக்கு
  11. வலையால் வந்த நாசம்
    மாசற்ற நெஞ்சம் இனி
    எப்படி நினைக்கும்?,
    உறவாய் வந்த சொந்தம்
    மாசில்லாமல் மன்னித்ததே!!

    கதையுடன்கூடிய கவிதை மிக அருமை மலிக்கா அக்கா..,

    ஆமா போன பதிவ ஏன் டெலிட் பண்ணீங்க.., நான் படிக்கல..

    பதிலளிநீக்கு
  12. மலிக்கா அருமையான கதையும் கவிதைகளையும் சொல்லி அந்த பெண்ணை மனம் மாற செய்துவிட்டீகளே!! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வலையால் வந்த நாசம்
    மாசற்ற நெஞ்சம் இனி
    எப்படி நினைக்கும்?,
    உறவாய் வந்த சொந்தம்
    மாசில்லாமல் மன்னித்ததே!!

    கதையுடன்கூடிய கவிதை மிக அருமை மலிக்கா அக்கா..,//

    மிக்க மகிழ்ச்சி மின்மினி.கருத்துக்கும் கவிதைக்கும்.

    //ஆமா போன பதிவ ஏன் டெலிட் பண்ணீங்க.., நான் படிக்கல//

    டெலிட் பண்ணினேனா இல்லையேம்மா. அது அங்கேயே அப்படியே இருக்கே.
    அழகாய் ஓவிமெல்லாம் வரைந்து போட்டிருக்கேன்.

    ஏன் மின்மினி ஓவியம் விளங்களையா அது பூவாம் சொல்லிகிறாங்க.போய் பாருங்க இருக்கு..

    பதிலளிநீக்கு
  14. //தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை//

    arumai . excellent

    பதிலளிநீக்கு
  15. மனிதனின் மனதைத் தத்துவத்தில் அடக்கிய கவிதையும் கதையும் அருமை மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  16. ///மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும் அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்.////
    ///மனம்போனபடி வாழ்வதா வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதானே வாழ்க்கை, எப்படிவேண்டுமென்றாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்லவே!////

    மனிதன் எப்படி வாழ்ந்தால் தனக்கும் மற்றவர்க்கும் சமுதாயத்திற்கும் நன்மை என்பதை வழிகாட்டும் வரிகள்... சபாஷ்...!

    ///மனமே...! நீ தவறிழைப்பது இயல்பு - அதுவே தொடர்வது அழகற்ற மரபு....
    மனிதன் தவறிச்செய்யும் சிறு குறும்பு - அதுவே பின்னால் யானைக் காதில் புகுந்த எறும்பு....////

    தவறைச் செய்பவன்தான் மனிதன்... அதனை திருத்திகொள்பவன் மனிதருள்மனிதன்... திருத்திக்கொள்ளமால் தொடர்பவன் மானிதன் (மிருகம்).... என்ற இக்கருத்தை அழகாய் கவிதை வரிகளில்...

    ///தவறை செய்து விட்டபின் மனமே.... தவறுவதிலிருந்து திரும்பு - அதுவே உனக்கு நீயே கொடுக்கும் மருந்து....///

    செய்த தவறை உணர்தலே ஓர் பாவமன்னிப்பு என்பதை கவிதையாய்....

    ///மனசாட்சியோடு வாழ்வது சிறப்பு.... அதை துறந்து வாழ்வது - உனக்கு நீயே தேடிக்கொள்ளும் இழப்பு
    மனம்போல் வாழ்வதா அழகு - உன் மனசாட்சியில் வேண்டும் நலவு -அதனால் மனதோடு மல்லுக்கு நின்று பழகு..///

    புனிதனாய் மனிதன் மாற... வளர... மனசாட்சியுடன் வாழ்ந்தாலே போதும்.. அதோடு மனம் போனப் போக்கில் வாழாமல்... நன்மையையும் தீமையும் அறிந்து மனதோடு மல்லுக்கட்டி சிறந்ததை தேர்வு செய்து வாழ் என்பதை உணர்த்தும் சிறந்த வரிகள்...
    இதில்... "நலவு"...? விளக்க வேண்டுகிறேன்...

    இறுதியாய்... டிஸ்கியில் வடித்த ///இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம். அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா? இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே?////

    முற்றிலும் சரியே...! மலிக்கா...!

    மொத்தத்தில்...

    இன்றைய யதார்த்தமான - உண்மையான - நிறைய இடங்களில் நடைபெற்று வரும் ஓர் நிகழ்வை - "தடுமாற்றம்" எனும் இந்த நிகழ்வை - (இதை கதை என்று நீங்கள் சொல்லலாம்... இது எனக்கு கதையல்ல... இதுபோன்ற ஓர் நிகழ்வு சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு (சாட்டிங் வந்த புதிது) இங்கே நடைபெற்றதை நான் நன்கறிவேன்...) நம் சமுதாய அக்கறையுள்ள - சமுதாய நலவிரும்பியாகிய தாங்கள் எடுத்து மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் மனிதனின் உள்ளமும், உடலும், வாழ்வும் சீரழியும் என்பதை "தடுமாற்றம்" எனும் நிகழ்வின் மூலமும்... சிறந்த கவிதை மூலமும் அனைவருக்கும் குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கும் - இளைஞ்சிகளுக்கும் அறிவுரை அளிக்கும் சிறந்த நிகழ்வு... சிறந்த கவிதை....

    வாழ்த்துக்கள்....மலிக்கா...!
    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  17. தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை]]

    சிறப்பா சொன்னீங்க ...

    பதிலளிநீக்கு
  18. S Maharajan கூறியது...
    //மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு//
    தவறு செய்தவன் அந்த தவறை தானே திருத்தி கொள்ளவேண்டும்.
    மகத்துவமான இந்த கருத்தை கவிதையால் மனம் நெகிழ சொல்லி விட்டிர்கள்.//

    மிக்க நன்றி மகராஜன். தொடர்வருகைக்கும் ஊக்கமிகு கருத்துக்களுகும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. //
    நாடோடி கூறியது...
    க‌தையும் அதோடு சேர்ந்த‌ க‌விதையும் அழ‌கு.... ர‌சித்தேன்.//

    ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  20. Chitra கூறியது...
    மனிதன்
    தவறிச்செய்யும் சிறு குறும்பு
    அதுவே
    பின்னால் யானைக் காதில்
    புகுந்தஎறும்பு


    .... super! ஆண்டு விழா மலரில் வெளியான உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்
    .//

    வாழ்த்துக்களுக்கும் சூப்பருக்கும் மிக்கநன்றி சித்ராமேடம்...

    பதிலளிநீக்கு
  21. //மனிதன்
    தவறிச்செய்யும் சிறு குறும்பு
    அதுவே
    பின்னால் யானைக் காதில்
    புகுந்தஎறும்பு//

    இதில் சிறு ’’துரும்பு’’ என்று வந்திருந்தால் இன்னும் சிறப்பு ./

    சிறு குறும்பென்று செய்யும் தவறுகள்தான் பெரும் [வம்பாகி]எறும்பாகி மு[விடு]டிகிறது என்றதொனியில் எழுதினேன். அண்ணாத்தே இப்போது சிறப்புதானே!

    /கவித டி ஆர் ரேஞ்சிக்கு பிண்ணி பெடலெடுத்துட்டீங்க. சூப்பர்.//

    ஓகோ அப்படியா.

    நான் யாரு
    மல்லின்னு
    எனக்கு பேரு-நா
    எதச்சொன்னாலும்
    அடிக்காது போரு
    இந்தாங்க
    குடிங்க மோரு..

    அச்சோ இதென்ன தகராரு
    மல்லி
    நீ ஓடிரு..

    எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  22. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    கதைக்குள் கவிதை
    சிறப்பாக இருக்கிறது,
    வாழ்த்துக்கள்!!

    வாழ்த்துக்களுக்கும் சிறப்புக்கும் மிக்கநன்றி சை கொ ப.

    பதிலளிநீக்கு
  23. பித்தனின் வாக்கு கூறியது...
    அற்புதமாக உள்ளது, தவறு செய்வது தவறில்லை, ஆனால் அதை உணர்ந்து திருந்தாமல் இருப்பது தவறு. இதைக் காட்டிலும் பெரிய தவறு செய்த தவறை நியாயப்படுத்துவது. கதையும்,கதைக்குள் கவிதையும் மிக அருமை.//

    நிச்சியமாக சுதாகர் சார் உண்மையிலும் உண்மை தாங்களின் கருத்து.

    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்..

    21 ஏப்ரல், 2010 9:18 am

    /சந்தோஷி கூறியது...
    நாம் எதில் சரிக்கினோம்?
    எதற்கு மற்றவரின் வார்த்தையில் மயங்கினோம்?
    வார்த்தைகள் அத்தனை வலிமையானதா?
    தவறிவிட இருந்தோமே!
    நல்வாழ்க்கையை தொலைக்க நினைத்தோமே.//

    அதுதானே பலநேரம்புரியவில்லை.
    தவறுகளின் பொறுப்புகு முழுக்காரணமே இந்த மனதுதான் அதை கட்டுப்படுத்த தெரிந்துவிட்டால் போதும்./

    அதுபோதுமே! மற்றதை அழகாய் கையண்டுவிடலாம்


    மிகத்தெளிவான கதையும் கவிதையும்.வாழ்த்துக்கள் மலிக்கா//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சிப்பா

    21

    பதிலளிநீக்கு
  24. malar கூறியது...
    மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும்
    அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்/

    மிக மிக சரியே.

    மனம் குரங்காகும் நேரத்தில் மனிதன் தன்னை மறக்கிறான்.
    அழிவில் முடியும்போது தனனை இழக்கிறான்..///

    சத்தியமாக!!!!!

    //21 ஏப்ரல், 2010 9:59 am

    malar கூறியது...
    தவறிழைக்காத மனிதறென்று
    எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர்
    மனிதரில்லை


    மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு.//

    kavithaiyum athan poruLum mika arumai.

    21 ஏப்ரல், 2010 10:00 am

    malar கூறியது...
    தவறிழைக்காத மனிதறென்று
    எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர்
    மனிதரில்லை


    மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு..//

    கவிதைக்குள் பொதிதுள்ள அறிவுரைகள் மிக மிக அருமை

    21 ஏப்ரல், 2010 10:01 am

    ஊக்கம் கொடுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியும் மிக்க நன்றியும்

    பதிலளிநீக்கு
  25. நல்ல கதையிம் கவிதையிம் என் மல்லிபூ மனதில் அலகு நீரோடை போல் கதையிம்கவிதையிம் ஓடிஉடியருது எங்கல் மனதை வலைத்து பொட்டு விட்டதே

    பதிலளிநீக்கு
  26. //மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு//

    நல்லா சொன்னீங்க...
    கதையும் அதனுள் கவிதையும் அருமை மலிக்கா அக்கா.

    பதிலளிநீக்கு
  27. தவறுகள் படிப்பினை...அழகாய் சொல்லிடீங்க மலிக்கா அக்கா...கவிதையும் எதார்த்தமாய் இருக்கு...

    பதிலளிநீக்கு
  28. பொருளுடன் கூடிய கரு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. கதையும் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  30. கிரேட் மேடம் , நல்லா அழுத்தமா சொல்லிருக்கிங்க

    பதிலளிநீக்கு
  31. கிரேட் மேடம் , நல்லா அழுத்தமா சொல்லிருக்கிங்க

    பதிலளிநீக்கு
  32. அற்புதமான, தேவையான, உபயோகமான கட்டுரை..

    பதிலளிநீக்கு
  33. கதையும் ....கவிதையும் ரொம்ப அருமையா இருக்குங்க மலிக்கா! கவிதை வரிகலத்தனையும் மிகச்சிறந்த தத்துவங்களாய் தெரிகின்றன.....

    பதிலளிநீக்கு
  34. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    மலிக்கா அருமையான கதையும் கவிதைகளையும் சொல்லி அந்த பெண்ணை மனம் மாற செய்துவிட்டீகளே!! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    மாறவில்லைன்னா அடியசாத்திருவோமுல்ல.
    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.அரபி ஷேக்


    LK கூறியது...
    //தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை//

    arumai . excellent..//

    மிக்க நன்றி LK ...

    பதிலளிநீக்கு
  35. ஹேமா கூறியது...
    மனிதனின் மனதைத் தத்துவத்தில் அடக்கிய கவிதையும் கதையும் அருமை மல்லிக்கா//

    மிக்க நன்றி ஹேமா..
    //

    //Ammu Madhu கூறியது...
    romba nalla irukku malliga//

    மிக்க நன்றி Ammu Madhu..

    பதிலளிநீக்கு
  36. சிறுகதை நல்லா இருக்கு, தவறை சட்டென உணர்ந்து திருந்தியது மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  37. //மனிதன் எப்படி வாழ்ந்தால் தனக்கும் மற்றவர்க்கும் சமுதாயத்திற்கும் நன்மை என்பதை வழிகாட்டும் வரிகள்... சபாஷ்...!//

    சபாஷூக்கு மிக்க நன்றி


    //தவறைச் செய்பவன்தான் மனிதன்... அதனை திருத்திகொள்பவன் மனிதருள்மனிதன்... திருத்திக்கொள்ளமால் தொடர்பவன் மானிதன் (மிருகம்).... என்ற இக்கருத்தை அழகாய் கவிதை வரிகளில்...//


    செய்த தவறை உணர்தலே ஓர் பாவமன்னிப்பு என்பதை கவிதையாய்....//

    நிச்சியமாக முரளி தவறு செய்வது மனித இயல்பு அதற்காக நான் தொடர்ந்து தவறுகளிலேயே மூழ்கியிருப்பேன் என்பது என்ன மனிதம்..
    செய்த தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி அத்தவற செய்யாதிருக்க முயற்ச்சிப்பவனே மனிதன்..


    //புனிதனாய் மனிதன் மாற... வளர... மனசாட்சியுடன் வாழ்ந்தாலே போதும்.. அதோடு மனம் போனப் போக்கில் வாழாமல்... நன்மையையும் தீமையும் அறிந்து மனதோடு மல்லுக்கட்டி சிறந்ததை தேர்வு செய்து வாழ் என்பதை உணர்த்தும் சிறந்த வரிகள்...
    இதில்... "நலவு"...? விளக்க வேண்டுகிறேன்...//

    நலவு என்றால்? நல்லது மனசாட்சி நல்லதை நினைத்தால்தானே நாம் நல்லதை செய்யமுடியும் அதான் நலவு.

    //இறுதியாய்... டிஸ்கியில் வடித்த ///இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம். அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா? இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே?////

    முற்றிலும் சரியே...! மலிக்கா...!//

    ஆமாம் முரளி இன்ற நிறைய இடங்களீல் நடக்கிறது அதனால் வாழ்வே தொலைகிறது.

    அதைபார்க்கும்போது மனம் கஷ்டமாக இருக்கு அதான் இப்படி ஒரு கதைக்குள் கவியாக உருவானது..

    //மொத்தத்தில்...

    இன்றைய யதார்த்தமான - உண்மையான - நிறைய இடங்களில் நடைபெற்று வரும் ஓர் நிகழ்வை - "தடுமாற்றம்" எனும் இந்த நிகழ்வை - (இதை கதை என்று நீங்கள் சொல்லலாம்... இது எனக்கு கதையல்ல... இதுபோன்ற ஓர் நிகழ்வு சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு (சாட்டிங் வந்த புதிது) இங்கே நடைபெற்றதை நான் நன்கறிவேன்...) நம் சமுதாய அக்கறையுள்ள - சமுதாய நலவிரும்பியாகிய தாங்கள் எடுத்து மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் மனிதனின் உள்ளமும், உடலும், வாழ்வும் சீரழியும் என்பதை "தடுமாற்றம்" எனும் நிகழ்வின் மூலமும்... சிறந்த கவிதை மூலமும் அனைவருக்கும் குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கும் - இளைஞ்சிகளுக்கும் அறிவுரை அளிக்கும் சிறந்த நிகழ்வு... சிறந்த கவிதை....

    வாழ்த்துக்கள்....மலிக்கா...!
    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    இத்தனை அழகான ஆழமான கருத்துக்கள் தங்களிடமிருந்து வந்ததை
    நினைத்தும் அதை இந்த உலக இளைஞ இளைனிளுக்கு தாங்களே எடுத்துக்கூறிய விதமும் மிகவும் அருமை முரளி.
    மிக்க நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  38. அன்புடன் மலிக்கா கூறியது...

    //காஞ்சி முரளி கூறியது...

    மனிதன் எப்படி வாழ்ந்தால் தனக்கும் மற்றவர்க்கும் சமுதாயத்திற்கும் நன்மை என்பதை வழிகாட்டும் வரிகள்... சபாஷ்...!//

    சபாஷூக்கு மிக்க நன்றி


    //தவறைச் செய்பவன்தான் மனிதன்... அதனை திருத்திகொள்பவன் மனிதருள்மனிதன்... திருத்திக்கொள்ளமால் தொடர்பவன் மானிதன் (மிருகம்).... என்ற இக்கருத்தை அழகாய் கவிதை வரிகளில்...//


    செய்த தவறை உணர்தலே ஓர் பாவமன்னிப்பு என்பதை கவிதையாய்....//

    நிச்சியமாக முரளி தவறு செய்வது மனித இயல்பு அதற்காக நான் தொடர்ந்து தவறுகளிலேயே மூழ்கியிருப்பேன் என்பது என்ன மனிதம்..
    செய்த தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி அத்தவற செய்யாதிருக்க முயற்ச்சிப்பவனே மனிதன்..


    //புனிதனாய் மனிதன் மாற... வளர... மனசாட்சியுடன் வாழ்ந்தாலே போதும்.. அதோடு மனம் போனப் போக்கில் வாழாமல்... நன்மையையும் தீமையும் அறிந்து மனதோடு மல்லுக்கட்டி சிறந்ததை தேர்வு செய்து வாழ் என்பதை உணர்த்தும் சிறந்த வரிகள்...
    இதில்... "நலவு"...? விளக்க வேண்டுகிறேன்...//

    நலவு என்றால்? நல்லது மனசாட்சி நல்லதை நினைத்தால்தானே நாம் நல்லதை செய்யமுடியும் அதான் நலவு.

    //இறுதியாய்... டிஸ்கியில் வடித்த ///இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம். அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா? இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே?////

    முற்றிலும் சரியே...! மலிக்கா...!//

    ஆமாம் முரளி இன்ற நிறைய இடங்களீல் நடக்கிறது அதனால் வாழ்வே தொலைகிறது.

    அதைபார்க்கும்போது மனம் கஷ்டமாக இருக்கு அதான் இப்படி ஒரு கதைக்குள் கவியாக உருவானது..

    //மொத்தத்தில்...

    இன்றைய யதார்த்தமான - உண்மையான - நிறைய இடங்களில் நடைபெற்று வரும் ஓர் நிகழ்வை - "தடுமாற்றம்" எனும் இந்த நிகழ்வை - (இதை கதை என்று நீங்கள் சொல்லலாம்... இது எனக்கு கதையல்ல... இதுபோன்ற ஓர் நிகழ்வு சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு (சாட்டிங் வந்த புதிது) இங்கே நடைபெற்றதை நான் நன்கறிவேன்...) நம் சமுதாய அக்கறையுள்ள - சமுதாய நலவிரும்பியாகிய தாங்கள் எடுத்து மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் மனிதனின் உள்ளமும், உடலும், வாழ்வும் சீரழியும் என்பதை "தடுமாற்றம்" எனும் நிகழ்வின் மூலமும்... சிறந்த கவிதை மூலமும் அனைவருக்கும் குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கும் - இளைஞ்சிகளுக்கும் அறிவுரை அளிக்கும் சிறந்த நிகழ்வு... சிறந்த கவிதை....

    வாழ்த்துக்கள்....மலிக்கா...!
    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    இத்தனை அழகான ஆழமான கருத்துக்கள் தங்களிடமிருந்து வந்ததை
    நினைத்தும் அதை இந்த உலக இளைஞ இளைனிளுக்கு தாங்களே எடுத்துக்கூறிய விதமும் மிகவும் அருமை முரளி.
    மிக்க நன்றி நன்றி நன்றி..

    24 ஏப்ரல், 2010 12:00 pm

    பதிலளிநீக்கு
  39. Mrs.Menagasathia கூறியது...
    Good story!!/

    மிக்க நன்றி மேனகா..




    நட்புடன் ஜமால் கூறியது...
    தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
    தவறிக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை]]

    சிறப்பா சொன்னீங்க ....

    மிக்க நன்றி ஜமால்காக்கா..

    பதிலளிநீக்கு
  40. சே.குமார் கூறியது...
    //மனமே!
    நீ தவறிழைப்பது இயல்பு
    அதுவே
    தொடர்வது அழகற்ற மரபு//

    நல்லா சொன்னீங்க...
    கதையும் அதனுள் கவிதையும் அருமை மலிக்கா அக்கா.//

    மிகுந்த மகிழ்ச்சி குமார்
    மிக்க நன்றி..
    அதுசரி
    அச்சோ மலிக்கா அக்காவா....


    /seemangani கூறியது...
    தவறுகள் படிப்பினை...அழகாய் சொல்லிடீங்க மலிக்கா அக்கா...கவிதையும் எதார்த்தமாய் இருக்கு...//

    மிக்க நன்றி கனி சீமாங்கனி..

    பதிலளிநீக்கு
  41. பாப்பு கூறியது...
    நல்ல கதையிம் கவிதையிம் என் மல்லிபூ மனதில் அலகு நீரோடை போல் கதையிம்கவிதையிம் ஓடிஉடியருது எங்கல் மனதை வலைத்து பொட்டு விட்டதே!

    வளைத்து போட்டுவிட்டதா என் செல்லமே!
    உன் தமிழ் அழ்கா இருக்கு உன்னைப்போல.

    தேறிட்டே பாப்பு இன்னும் எழுதிப்பழகு.
    ஜுல்பியா எப்படி இருக்கிறாள். ஆண்டிய தேடுறாளா..

    உன்கருத்துக்கு மிக்க மகிழ்ச்சிப்பா...




    //அப்பாவி தங்கமணி கூறியது...
    காலத்துக்கு ஏத்த கதை... நல்லா இருக்குங்க//

    மிக்க நன்றிங்க தங்கமணி அப்பாவி..

    பதிலளிநீக்கு
  42. ராஜவம்சம் கூறியது...
    பொருளுடன் கூடிய கரு வாழ்த்துக்கள்//

    வாந்தாச்சா ராஜவம்சம் ஊரில் எல்லாரும் நலமா?
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    //asiya omar கூறியது...
    கதையும் கவிதையும் அருமை.//

    நன்றி ஆஸியாக்கா..

    பதிலளிநீக்கு
  43. அஹமது இர்ஷாத் கூறியது...
    கவிதை அருமை.//

    நன்றி இர்ஷாத்..

    //மங்குனி அமைச்சர் கூறியது...
    கிரேட் மேடம் , நல்லா அழுத்தமா சொல்லிருக்கிங்க

    //மங்குனி அமைச்சர் கூறியது...
    கிரேட் மேடம் , நல்லா அழுத்தமா சொல்லிருக்கிங்க//

    வாங்க மங்குனி. தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  44. வைகறை நிலா கூறியது...
    அற்புதமான, தேவையான, உபயோகமான கட்டுரை..//

    மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி.
    வைகறை நிலா..




    //கவிதன் கூறியது...
    கதையும் ....கவிதையும் ரொம்ப அருமையா இருக்குங்க மலிக்கா! கவிதை வரிகலத்தனையும் மிகச்சிறந்த தத்துவங்களாய் தெரிகின்றன.....//

    வாங்க கவிதன் தாங்களின் கருத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது