நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரு அடி வேண்டும்




நினைத்தவைகள் அத்தனையும்
நினைத்தடங்குமுன் என்கண்ணெதிரில்
நிறுத்தும் என்னவனே

நினைத்து நினைத்துதான் கரைகிறேன்
நிகழவில்லையே உன்னால் அந்த
ஒன்றுமட்டும்

அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
ஆனால்

என்னையாளும் உன்கையால்
என்றாவது விழவேண்டுமே
ஒரு அடி

அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
அகிலம்விட்டு போனபின்னும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

42 கருத்துகள்:

  1. அருமையான கவிதை .. உங்கள் ஏக்கமும் கூட ..கடை பக்கம் வந்துட்டு போங்க

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்

    பதிலளிநீக்கு
  2. மலிக்கா ...வித்தியாசமான ஒரு கவிதை....விரைவில் அடி கிடைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
    அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
    ஆனால்
    என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    அருமையான வரிகள்....நல்ல கவிதை தோழி....

    பதிலளிநீக்கு
  4. உணர்வுப்பூர்வமாக கவிதை நல்லா இருக்கு மலிக்கா.

    பதிலளிநீக்கு
  5. அன்பா புடிச்சாலே கேஸ் போடற இந்த காலத்துல அடிக்கு ஏங்கறீங்களா? நல்ல கெமிஸ்ட்ரிங்க.. நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  6. என்ன சொன்னாலும்
    ரசிப்பவரை
    சீண்டவே
    சண்டை போடலாமா
    என்றால்
    அதற்கும் சரியென்பவரிடம் எப்படி சண்டை போட.

    பதிலளிநீக்கு
  7. அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
    அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
    அகிலம்விட்டு போனபின்னும்... ...............அருமையாய் சொல்லி இருக்கீங்க - கவிதையில்.

    பதிலளிநீக்கு
  8. என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி

    Anbumayamana Aasai!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  9. Anbana Kanavanukum Anbana Manaivukkum nadakkum chella sinunkkalai... kannamoochi vilaiyattai kavithaiyai sonna vitham arumai!

    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  10. ஏய் இங்க பாரு நீயுதான் இருக்க தொட்டதுக்கெல்லாம் அடிச்சிஅடிச்சி பேசாதிங்கன்னு சினுங்கிகிட்டு

    எந்தங்கச்சிய பாரு அதையே வரமா கேக்குது

    பதிலளிநீக்கு
  11. அன்பான அடியாக இருக்கட்டும். அப்பத்தான் வலிக்காது...

    பதிலளிநீக்கு
  12. //என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    அய்யோ... அய்யோ..

    எங்க வீட்டுல இப்பிடில்லாம் கேக்காம அந்த பக்கத்துல இருந்து குடுத்துகிட்டே இருக்காங்களே..

    நீங்க வேற வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க.....

    பதிலளிநீக்கு
  13. கொடுக்கச்சொன்னாப்போச்சி.,

    ஒன்னு போதுமா ஏனுங்க மச்சான் பாவம் ஒன்னு கொடுத்துடுங்க பொளச்சிபோகட்டும்..

    பதிலளிநீக்கு
  14. கவிதை மிகவும் அழகா இருக்கிறது
    வரிகளை அழகா கையாண்டு இருக்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. :)அழகான கவிதை!! அடிக்கிற கை தான் அணைக்கும்.

    பதிலளிநீக்கு
  16. கலக்கல் மலிக்கா கலக்கலான வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  17. Piriyamulla Thankaikku...

    Viliyaterkkukodu neenkalum... Machanum sandai podakkodathuuuuuuu enpathu eentha annanin pirarthanai!

    Piriyamuden...
    Trichy Syed

    பதிலளிநீக்கு
  18. //என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    ஏக்கம் தெரிக்க்கிறது வரிகள்

    கவிதை அழகு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. மலர்வனம் கூறியது...
    Piriyamulla Thankaikku...
    Viliyaterkkukodu neenkalum... Machanum sandai podakkodathuuuuuuu enpathu eentha annanin pirarthanai!
    Piriyamuden...
    Trichy Syed

    my coment :

    PASAMALAR SIVAJI SAVITHRI ANANAN THANKAI PAASAM NENCHAI NEKILA VAITHATHU!

    பதிலளிநீக்கு
  20. /புதியவன் கூறியது...
    மிகவும் நல்ல கவிதை/

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி புதியனே...

    பதிலளிநீக்கு
  21. /மீன்துள்ளியான் கூறியது...
    அருமையான கவிதை .. உங்கள் ஏக்கமும் கூட ..கடை பக்கம் வந்துட்டு போங்க

    அன்புடன்
    மீன்துள்ளி செந்தில்/

    மிக்க நன்றி மீந்துள்ளி செந்தில்.. கடை பக்கம்வந்து கமெண்டும்போட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
  22. /கருணையூரான் கூறியது...
    மலிக்கா ...வித்தியாசமான ஒரு கவிதை....விரைவில் அடி கிடைக்க வாழ்த்துக்கள்/

    கருணையூரானின் கருணையே கருணை.. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  23. /S.A. நவாஸுதீன் கூறியது...
    ஆகா. அருமை அருமை மலிக்கா/

    என்னண்ணா.. இன்னும் அடிவிலாமல் இருக்கே அதுக்கா இந்த அருமை.. சந்தோஷ்மண்ணா..

    பதிலளிநீக்கு
  24. ஆகா. அருமை அருமை மலிக்கா.

    19 டிசம்பர், 2009 3:23 pm

    உமா கூறியது...
    //அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
    அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
    ஆனால்
    என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    அருமையான வரிகள்....நல்ல கவிதை தோழி..//

    வருகைக்கும் கருத்துகும் மிக நன்றி தோழி. தொடர்ந்துவாருங்கள்..

    /sarusriraj கூறியது...
    malikka very nice (tamil font not working/

    சாருக்கா. உங்ககிட்டேயும் ஒன்னு வாங்கனும்பா...

    பதிலளிநீக்கு
  25. /பூங்குன்றன்.வே கூறியது...
    உணர்வுப்பூர்வமாக கவிதை நல்லா இருக்கு மலிக்கா.
    //


    மிக்க் நன்றி பூங்குன்றன்...

    பதிலளிநீக்கு
  26. /அண்ணாமலையான் கூறியது...
    அன்பா புடிச்சாலே கேஸ் போடற இந்த காலத்துல அடிக்கு ஏங்கறீங்களா? நல்ல கெமிஸ்ட்ரிங்க.. நடத்துங்க.../


    அடிக்கலைன்னாலும் கேஸ்போடலாமான்னு கேட்டு சொல்லுங்க அண்ணாமலையாரே...

    பதிலளிநீக்கு
  27. /S.A. நவாஸுதீன் கூறியது...
    என்ன சொன்னாலும்
    ரசிப்பவரை
    சீண்டவே
    சண்டை போடலாமா
    என்றால்
    அதற்கும் சரியென்பவரிடம் எப்படி சண்டை போட/

    அதுவும் சரிதான். இனி சண்டை போடலாம் என்றால் சரியென தலையாட்டிட வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  28. /Chitra கூறியது...
    அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
    அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
    அகிலம்விட்டு போனபின்னும்... ...............அருமையாய் சொல்லி இருக்கீங்க - கவிதையில்./


    மிக்க மகிழ்ச்சி தோழி தொடர்வருகைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  29. என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி

    Anbumayamana Aasai!



    மலர்வனம் கூறியது...
    Anbana Kanavanukum Anbana Manaivukkum nadakkum chella sinunkkalai... kannamoochi vilaiyattai kavithaiyai sonna vitham arumai!

    Mrs. Sabira Syed/

    மிகுந்த சந்தோஷம் சாபிரா சையத்..

    பதிலளிநீக்கு
  30. /ராஜவம்சம் கூறியது...
    ஏய் இங்க பாரு நீயுதான் இருக்க தொட்டதுக்கெல்லாம் அடிச்சிஅடிச்சி பேசாதிங்கன்னு சினுங்கிகிட்டு

    எந்தங்கச்சிய பாரு அதையே வரமா கேக்குது/

    இதெல்லாம் வேற நடக்குதா/ மச்சி அண்ணா அடிச்சா அழுவீங்களா எப்படி?

    ஆமாண்ணா வரம்கேட்டாலும்கிடைக்கலயே..

    பதிலளிநீக்கு
  31. புலவன் புலிகேசி கூறியது...
    அன்பான அடியாக இருக்கட்டும். அப்பத்தான் வலிக்காது...
    /

    அன்புன்னாலே வலிக்காதுதான் முருகா..நன்றி தோழா..

    பதிலளிநீக்கு
  32. கண்ணா.. கூறியது...
    //என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    /அய்யோ... அய்யோ..

    எங்க வீட்டுல இப்பிடில்லாம் கேக்காம/

    கண்ணாவின் மீராவே கேட்டுக்கோங்க

    /அந்த பக்கத்துல இருந்து குடுத்துகிட்டே இருக்காங்களே../

    இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா..


    /நீங்க வேற வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க/

    அதுவேறயா???

    வருகைக்கும் கருக்கும் மிகுந்த மகிழ்ச்சி கண்ணா..

    பதிலளிநீக்கு
  33. /வாசமுடன் கூறியது...
    கொடுக்கச்சொன்னாப்போச்சி.,

    ஒன்னு போதுமா ஏனுங்க மச்சான் பாவம் ஒன்னு கொடுத்துடுங்க பொளச்சிபோகட்டும்../

    வாம்மா வா ஒரு பிளாக் திறந்து தந்தேனே அதில் ஒரு பிட்டப்போடத்தெரியலை போட்டதையும் காணோம், இதில் ரெக்கெமண்டெஷன் வேறயா? போச்சுபோ

    பதிலளிநீக்கு
  34. /கமலேஷ் கூறியது...
    கவிதை மிகவும் அழகா இருக்கிறது
    வரிகளை அழகா கையாண்டு இருக்கிறீர்கள்..
    வாழ்த்துக்கள்//


    நீங்கள் கையாளும் வரிகளைவிடவா கமலேஷ் நாங்க கத்துக்குட்டி உங்க கவிதையில் கத்துக்கிட்டு இருக்கேன் வரிகளின் வார்த்தைகளை....நன்றி கமலேஷ்..

    பதிலளிநீக்கு
  35. /SUFFIX கூறியது...
    :)அழகான கவிதை!! அடிக்கிற கை தான் அணைக்கும்./

    என்ன ஷஃபியண்ணா பாட்டெல்லாம் பாடுறீங்க.

    /Jaleela கூறியது...
    கலக்கல் மலிக்கா கலக்கலான வரிகள் அருமை..//


    அட்டகாச சமயல் ராணியே ஜல்லீலாக்கா. அருமைக்கு மகிழ்ச்சி..

    மலர்வனம் கூறியது...
    Piriyamulla Thankaikku...

    Viliyaterkkukodu neenkalum... Machanum sandai podakkodathuuuuuuu enpathu eentha annanin pirarthanai!

    Piriyamuden...
    Trichy Syed

    மிகுந்த மகிழ்ச்சி சகோதரர் சையத் அவர்களே..

    பதிலளிநீக்கு
  36. அபுஅஃப்ஸர் கூறியது...
    //என்னையாளும் உன்கையால்
    என்றாவது விழவேண்டுமே
    ஒரு அடி//

    ஏக்கம் தெரிக்க்கிறது வரிகள்

    கவிதை அழகு வாழ்த்துக்கள்//


    மிக்க மகிழ்ச்சி அபு, வாழ்த்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  37. /சிலம்பரசன்.S.A கூறியது...
    arumai nanba/

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. சிலம்பரசன்...

    /LAKSHMIPRIYA கூறியது../.
    மலர்வனம் கூறியது...
    Piriyamulla Thankaikku...
    Viliyaterkkukodu neenkalum... Machanum sandai podakkodathuuuuuuu enpathu eentha annanin pirarthanai!
    Piriyamuden...
    Trichy Syed

    my coment :

    PASAMALAR SIVAJI SAVITHRI ANANAN THANKAI PAASAM NENCHAI NEKILA VAITHATHU!
    வாழ்த்துக்கள் பலிக்கட்டும் நன்றி ப்ரியா..

    பதிலளிநீக்கு
  38. /சிலம்பரசன்.S.A கூறியது...
    arumai nanba/

    மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. சிலம்பரசன்...

    /LAKSHMIPRIYA கூறியது../.
    மலர்வனம் கூறியது...
    Piriyamulla Thankaikku...
    Viliyaterkkukodu neenkalum... Machanum sandai podakkodathuuuuuuu enpathu eentha annanin pirarthanai!
    Piriyamuden...
    Trichy Syed

    my coment :

    PASAMALAR SIVAJI SAVITHRI ANANAN THANKAI PAASAM NENCHAI NEKILA VAITHATHU!
    வாழ்த்துக்கள் பலிக்கட்டும் நன்றி ப்ரியா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது