நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அச்சச்சோ



என்ஆடைகளை கலைந்து
என்னை அலங்கோலம்செய்ததால்
ஆத்திரம் அடைந்த நான்!

என் காரத்தையெல்லாம் அகங்காரத்தோடு
கண்ணுக்குள் நுழைத்து தாரை தாரையாய்
கண்ணீரை வரவழைத்து விடுகிறேன்

ஆத்திரமும் கோபமும்
உங்களுக்கு மட்டுமில்லை
எங்களுக்கும் உண்டு என்று
வேதனைபட்டுக்கொண்டே
வெந்தது வெங்காயம் குழம்பில்......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

10 கருத்துகள்:

  1. டெம்ப்ளெட் அல்லது வண்ணங்கள் மாற்ற இயலுமா பாருங்க மலிக்கா.. படிக்க சிரமமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. மலிக்கா அசத்தால இருக்கு வெங்காயத்துக்கு ஒரு நல்ல கவிதை படைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. //nice one//
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    என் இதயத்திலிருந்து

    பதிலளிநீக்கு
  4. //டெம்ப்ளெட் அல்லது வண்ணங்கள் மாற்ற இயலுமா பாருங்க மலிக்கா.. படிக்க சிரமமா இருக்கு.//

    முடிந்தவரை வண்ணங்களை மாற்றியுள்ளேன் சஞ்சய்
    இப்போதுசரியாக இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  5. கலக்கலா கருத்துக்கள் தருவதால் அசத்தலா
    இன்னும் இன்னும் கவிதைகளை
    படைக்கப்பார்க்கிறேன்.
    நன்றி ஜலீலாக்கா

    //மலிக்கா அசத்தால இருக்கு வெங்காயத்துக்கு ஒரு நல்ல கவிதை படைத்து விட்டீர்கள்//

    பதிலளிநீக்கு
  6. அழுக வைக்கிற வெங்காயம் கூட இத படிச்சா சிரிச்சு இருக்கும், கலக்குறீங்க

    பதிலளிநீக்கு
  7. மலிக்கா,வாழ்த்துக்கள்.வெங்காயத்தைப் பற்றி வெகு ஜோராக கவிதை புனைந்த உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ்.

    பதிலளிநீக்கு
  8. மலிக்கா,வெங்கயத்தை பற்றி வெகு ஜோராக கவிதை தந்த உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது