நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மீண்டும் ஒரு விருது


பாசமுள்ள தோழி மேனகாசத்தியா அவர்கள் வழங்கியவிருது.

மனம் மகிழ்ச்சியில்திழைக்கிறது தோழமைகளின் ஊக்கங்கள் நம்மை
மேலும் மேலும் வலுவடைச்செய்யும், அவ்விதத்தில்
நான் மிகவும்கொடுத்துவைத்தவள்.

மென்மேலும் இந்த ஊக்கத்தை உங்கள் கருத்துக்களின் மூலம் இந்த
தோழமைக்குத்தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வந்துசெல்லும் அனைத்து தோழமைக்களுக்கும்
இவ்விருதினை வழங்குகிறேன்.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அச்சச்சோ



என்ஆடைகளை கலைந்து
என்னை அலங்கோலம்செய்ததால்
ஆத்திரம் அடைந்த நான்!

என் காரத்தையெல்லாம் அகங்காரத்தோடு
கண்ணுக்குள் நுழைத்து தாரை தாரையாய்
கண்ணீரை வரவழைத்து விடுகிறேன்

ஆத்திரமும் கோபமும்
உங்களுக்கு மட்டுமில்லை
எங்களுக்கும் உண்டு என்று
வேதனைபட்டுக்கொண்டே
வெந்தது வெங்காயம் குழம்பில்......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

கலைந்து எறி


கவலைகளை

மனச்சிறையில் அடைத்து வைக்காதே
அது செல்லாக மாறி

உன்னையே அரித்துவிடும் அழித்துவிடும்

கவலைப்படுவதால்

ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு

கவலையேற்படுமென்றிருப்பின்
அது வந்தேதீரும்

வருத்தம்வந்துவிட்டதே! என

நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா

எல்லாவற்றையும் எதிர்பார்த்து
வாழ்வதே

வாழ்க்கையென்றாகிவிட்டதால்

எதையுமே

ஓர் வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்


கவலையென்பது கானல்நீர்

”ஆனால்”
நீதான் அதை நீரென்று

நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்


கவலை கவலை என

உனக்கு நீயே ஏன்
வலை பின்னிக்கொள்கிறாய்


கவலையிலும்

ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்

”வ”என்ற
 வருத்தத்தை நீங்கிவிட்டு


கவலைகளா அதை கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு அல்லது
கவலையை கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்

கவலையே காணாமல்போய்விடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது