பத்துக்கு 10
இந்த தொடருக்கு என்னை அழைத்த தோழர் தியாவிற்கு நன்றி
இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
கவிஞர்
பிடித்தவர் –கவிக்கோ அப்துல்ரஹ்மான், கவியரசு வைரமுத்து
பிடிக்காதவர்- கொச்சையாக எழுதும் கவிஞர்கள்
தியாகி
பிடித்தவர்- வீரபாண்டிய கட்டபொம்மன்
பிடிக்காதவர்-எட்டப்பன் [போடனுமுள்ள]
இயக்குனர்
பிடித்தவர்- விக்ரமன் K. S. ரவிக்குமார்
பிடிக்காதவர்- எஸ்ஜே சூர்யா
அரசியல்வாதி
பிடித்தவர்- காமராஜர்
பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]
விஞ்ஞானி
பிடித்தவர்- டாக்டர் A P J அப்துல்கலாம்
பிடிக்காதவர்- தெரியவில்லை
நடிகை
பிடித்தவர் --பொய்சொல்லபிடிக்கலைங்கோ அதனால
பிடிக்காதவர்--யாரையுமே பிடிக்குமுன்னு சொல்லமுடியலைங்க
நடிகர்
பிடித்தவர்- சிவாஜிகணேசன்
பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்
பேச்சாளர்-
பிடித்தவர்- பாரதி பாஸ்கர்
பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்
எழுத்தாளர்
பிடித்தவர்- அப்துற் றஹீம், சுஜாதா,
பிடிக்காதவர்-சோ
இசையமைப்பாளர்
பிடித்தவர் இளையராஜா, A R ரஹ்மான்
பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா.
இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்
ப்ரியமுடன் வசந்த்
மேனகா சத்தியா
வெண்ணிற இரவுகள், கார்த்திக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
நாந்தானுங்க

நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும்
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்யபறந்து பறந்துதான் -என் ஆசைகளை
என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...
அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
என் மனவானில்
அடியே காதலியே
அன்பான தேவதையே!
பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்
விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்
உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்
கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்
எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்
முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்
அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




