நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணத்தின் விளிம்பில்,




விதி முடியும் தருமிது
வாழ்க்கை வாழ நேரமில்லை
சதிராட்டம் ஆடியதெல்லாம்
சக்தியை தருவதில்லை
செய்தவைகள் கண்முன்னே
சுழல் காட்சிகளாய்
சுழன்றுவர
மாட்சிபெற கைகுப்பி
மண்டியிட்டு கேட்டாலும்
மரணமது விடுவதில்லை
மண்ணில்
மறுவாழ்க்கை வாழ
வழி தருவதில்லை
சதியென்ற போதினிலும்
விதியென்ற போதினிலும்
மரணம்வென்ற மதியில்லை
மரணமில்லாத ஜீவன்களில்லை
உலகில் உள்ள அத்தனைக்கும்
இங்கேயேயிருக்க அனுமதில்லை
இவ்வுலகமும் நிரந்தரமில்லை.
 ------------------------------------------

அகோர மரணம்
ஆபாச மரணம்
நடுவழியில் மரணம்
நாதியத்த மரணம்
இவையணைத்துமில்லா
இலகுவான மரணம்
எனைத்தழுவ வேண்டி
இருகண்கள் மூடி
இறைவனிடம் வேண்டி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

  1. உண்மையான வரிகளை உள்ளடக்கிய அருமையான கவிதை அக்கா.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    நீரோட்டம் என்னும் வலைப்பூவில் மிக உயிரோட்டம் உள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    த.ம. 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. மாஷா அல்லாஹ்.
    நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது