நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இயற்கையற்றதால்!

 



பூக்கள்
விழுந்தாலும்
நசுங்கிறது பூமி

பூபாளம் கேட்டும்
புண்ணியமில்லாமல்
புதைகிறது புற்பூண்டுகள்

போகுமிடமெங்கும்
வரண்ட பூமியின்
வம்சா வழிக்கிளைகள்

கால வினோதத்தால்
தன்நிலை மாற்றிய
கால சூழ்நிலைகள்


மழைநீரை தன்மடியியில்
ஏந்த முடியாமல்
தாய்மண்ணின் நிலை

தார்சாலை மோகத்தில்
தார்மீகத்தை யிழந்த
மண்சாலை

மக்கிபோக வழியற்றவைகளால்
மாசுகளின் பிடியில்
மனிதநிலை

தவியாய் தவிக்கிறது
இயற்கையின்
இலை தலை நிலை

”இப்படியே”

தொடரும் நிலைகளால் -பலரின்
வாழ்க்கையின் நிறம்
வெறுமையாக காட்சியளிக்கிறது
              “ ‘ “
இதனால்தானோ என்னவோ
இந்திய ரூபாயின் மதிப்பும்
இறங்கிகொண்டே போகிறது..

---------------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

6 கருத்துகள்:

  1. அருமை... உண்மை...

    தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    பதிலளிநீக்கு

  2. தொடரும் நிலைகளால் -பலரின்
    வாழ்க்கையின் நிறம்
    வெறுமையாக காட்சியளிக்கிறது

    சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//


    பதிலளிநீக்கு
  3. மாஷா அல்லாஹ், வழக்கம்போல அருமை மலிக்கா! :)

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது