நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உனக்கும் எனக்குமானது!..


இது நினைவிருக்கிறதா? என்ற பின்னோக்கும் நியாபகங்களுக்காக முகநூலில் எழுதியது.. 

அட கண்டங்கள் தாண்டியும் அடி எடுத்துவைத்துவிட்டோமா! நம்பவேமுடியவில்லை.. 
ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

//மலிக்கா, உங்களின் கவிதை ஒன்று கனடாவில் வெளிவரும் தங்கத்தீபம் வாரப் பத்திரிகையில் போட்டுள்ளேன். உங்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். நன்றி. சிவா..//

இது சிவா அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலிருந்து .. 

முகமறியா மனிதர்களின் பாசங்கள் பிரம்மிக்கவைக்கிறது. இப்படி பல பாசங்கள் கிடைக்க எனக்கருளிய இறைவனுக்குதான் நன்றியை தெரிவிக்கவேண்டும். 
எனது கிறுக்களையும் கவிதையாய் ஏற்று அதை வெளியிட்ட தங்கதீபம் பத்திரிக்கைக்கும். அதை வெளியிடக்காரணமாக இருந்த சகோதரர் திரு சிவா அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றிகள்...

நன்றி நன்றி நன்றி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோ, அருமையான கவிதைக்கு அங்கீகரம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் கலக்குங்க சகா.

    பதிலளிநீக்கு
  2. சகோ , எனது தளத்தில் ஒரு கவிதைப் போட்டி அறிவிப்பு செய்திருக்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்கள் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்

    http://kavisolaii.blogspot.com/2011/05/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  3. ”உனக்கும் எனக்குமானது” கவிதை நல்ல இருக்கு.

    “பிரிவின் துயர்” என்னும் கவிதை கனடாவிலிருந்து வெளியாகும் ”தங்கத்தீபம்” வார இதழில் வெளியானதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்.உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்

    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. இப்பதாங்க வந்திருக்கேன் , இனிமே அடிக்கடி வரேங்க .,

    பதிலளிநீக்கு
  6. காங்கேயம் கோபி29 மே, 2011 அன்று PM 11:17

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. இன்னும் பல கண்டங்களை தாண்டுவீர்கள் அதில் சந்தேகமேயில்லை.. வரிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது..மீண்டும் வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  7. என் வாழ்த்திய மற்றும் கருத்துகளையும் பகிர்ந்த என் அன்பின் உறவுகள் தங்கள் அனைவருக்கும் எனது அன்பான மல்ர்கொத்துகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும்.

    என்றும் உங்கள்
    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு
  8. தங்க தீபம்...

    இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    மலிக்கா...

    பதிலளிநீக்கு
  9. //செந்தில்குமார் கூறியது...

    தங்க தீபம்...

    இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    மலிக்கா...//

    மிக்க மகிழ்ச்சி செந்தில்.நன்றி தொடர்ந்து வருக..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது