நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிரின் வேர்கள்.

பதுமையே பதுமையே-உன்

பட்டுமேனி தொட்டிடவா
பஞ்சுக் கன்னம் தொட்டிடவா
பிஞ்சு விரல் தொட்டுமீட்டி
பிள்ளையுன்னை கொஞ்சிடவா

பூப்போன்று முடிவைத்துக்கொண்டு
பொசுபொசுவென கிடக்கின்றாய்
காதுமடல் நான்தொட்டால்
கைகால்கள் ஆட்டுகின்றாய்

நெற்றிரோமம் நீக்கிவிட்டால்
நெளிந்து வளைந்து கூசுகின்றாய்
இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
இமைக்கவிடாது செய்கின்றாய்

உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
உச்சிகுளிர வைக்கின்றாய்-என்
உள்ளங்கையில் ஏந்துகையில்-இந்த
உலகே நீயென உணர்த்துகின்றாய்

கருவறையில் இருந்தவரை
காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
கண்மணியே என் காலம்வரை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

29 கருத்துகள்:

  1. //கருவரையில் இருந்தவரை
    காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
    கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
    கண்மணியே என் காலம்வரை.//

    சூப்ப‌ர் வ‌ரிக‌ள்... அன்னையின் மொழிக‌ள்.

    பதிலளிநீக்கு
  2. தாய்மையான வரிகள். அருமை

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகளும் கவிதையும் அழகு

    பதிலளிநீக்கு
  4. நாடோடி கூறியது...
    //கருவரையில் இருந்தவரை
    காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
    கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
    கண்மணியே என் காலம்வரை.//

    சூப்ப‌ர் வ‌ரிக‌ள்... அன்னையின் மொழிக‌ள்,..//

    முதல் வருகைக்கும் 1 st கருத்துக்கும். மிக்க நன்றி ஸ்டீபன்

    பதிலளிநீக்கு
  5. கலாநேசன் கூறியது...
    தாய்மையான வரிகள். அருமை.//

    மிக்க நன்றி கலாநேசன்..

    பதிலளிநீக்கு
  6. சுல்தான் கூறியது...
    குழந்தைகளும் கவிதையும் அழகு.//

    நீண்ட இடைவெளிக்குபின் வந்திருக்கும் தங்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தாய்மையின் வெளிப்பாடு...அருமை

    பதிலளிநீக்கு
  8. Vijiskitchen சொன்னது…
    மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி.

    17 ஜூலை, 2010 6:04 am //

    மலிக்கா இன்றுதான் இதைபடித்தேன்பா எவ்வளவுதந்தோஷமாக இருக்குதெரியுமா.
    உங்கள்கூட தோழியானதுக்கு பெருமையாக இருப்பா.
    இன்னும் நீங்க முன்னெற என் துஆக்காள் இறைவன் உங்க நல்லகுணத்து எல்லாம் நன்மையாகித்தருவான்.

    என்னாமா கவிதயெழுதுறீங்க. இந்தகவிதை எனக்கு ஏக்கதை யேற்படுத்துது குழந்தை இல்லாததுகஷ்டம்னாகயிருந்தாலும் நிச்சயம் உங்க துஆவால் கிடைக்கிக்கும். நானும் உணர்வேன் இதருணத்தை..

    என்றும் தோழியாகவேயிருக்கும்
    பிரோஷாபாத்திமா..

    பதிலளிநீக்கு
  9. தாய்மையின் வெளிப்பாடு கவிதையாக...

    அருமை...

    பதிலளிநீக்கு
  10. கவிதை தலைப்பே அற்புதம் மலிக்கா...
    தெய்வீகமாய் போற்றப்படும் "தாய்மை" கவிதை அருமை...

    ///இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
    இமைக்கவிடாது செய்கின்றாய்///
    ///உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
    உச்சிகுளிர வைக்கின்றாய்-என்////

    இறுக்கியும்... இமைத்தும்... உச்சி முகர்ந்தும்.. உச்சிகுளிரவும் மிகமிக மகிழ்ச்சியின் உச்ச வரிகள்...

    ///கருவறையில் இருந்தவரை
    காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
    கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
    கண்மணியே என் காலம்வரை.///

    நல்ல வரிகள்...
    சுகமான சுமைதான்... சரி... ஏற்றுக்கொள்கிறேன்...

    நாளை...

    தன்னை
    சுகமான சுமையாய்
    சுமந்தவளை... - பெருஞ்
    சுமையாய் கருதி...
    'முதியோர் இல்லத்தில்' தள்ளிவிடும் பதுமைகள்...

    anyhave...
    நல்ல... அழகான... அருமையான கவிதை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  11. அருமை பற்றி சொல்லும் க்விதை.பாரட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. கவிதையை படித்ததும் குழந்தையை தூக்கிய உணர்வு ..!!!

    பதிலளிநீக்கு
  13. தாய்மையின் வெளிப்பாடு கவிதையாக..!

    அருமையான கவிதை..!

    பதிலளிநீக்கு
  14. அருமையான வரிகள் மலிக்கா.
    ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் இன்னும் தாயாகவில்லையென்றாலும் நானும் தாய்மையை உணர்ந்தேன். நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  15. //இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
    இமைக்கவிடாது செய்கின்றாய்//

    தாய் உள்ளத்து ரசனை அப்படியே நான் மூன்று முறை படிச்சேன் அக்கா..அருமை பிள்ளையின் ஸ்பரிசம் போலவே வார்த்தைகளை சேர்த்து இருக்கீங்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. சூப்பர் கவிதை அப்படியே குழந்தைகைகளில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீங்கம்மல்லி.

    எக்ஸலண்ட். சூப்பர்...

    பதிலளிநீக்கு
  17. நாலாவது குழந்தை வேண்டாம் என்று இருந்தேன்....இப்படி ஒரு கவிதையை எழுதி ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள் :)..பார்க்கலாம்....அருமையான கவிதை மலிக்கா

    பதிலளிநீக்கு
  18. பொதுவாக பேனாவில் மை ஊற்றி கவிதை எழுதுவார்கள் ...நீங்கள் உணர்வை ஊற்றுகிறீர்களே எப்படி ?

    பதிலளிநீக்கு
  19. அன்பானத் தங்கை மலிக்கா
    நீராட வந்து விட்டேன்
    நீ எழுதியுள்ள கவிதையும்
    நான் என் பெயரனை பற்றி
    எழுதிய கவிதையும் ஒரே "உணர்வை' தருகின்றதே...
    "ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் முகம் பார்க்கும் கண்ணாடி "
    நான் "முகம்' என்ற தலைப்பில் முகநூலில் எழுதிய வரிகள்
    நிதர்சனம்; அதுவே இக்கவிதைக்கான என் விமர்சனம்

    எனது கவிதைகள் இந்த நீரோடையில் நீந்தலாமா?

    பதிலளிநீக்கு
  20. அஹமது இர்ஷாத் கூறியது...
    தாய்மையின் வெளிப்பாடு...அருமை

    மிக்க நன்றி இர்ஷாத்

    18 ஜூலை, 2010 9:31 am


    பிரோஷாபாத்திமா கூறியது...
    Vijiskitchen சொன்னது…
    மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//



    17 ஜூலை, 2010 6:04 am //

    மலிக்கா இன்றுதான் இதைபடித்தேன்பா எவ்வளவுதந்தோஷமாக இருக்குதெரியுமா.
    உங்கள்கூட தோழியானதுக்கு பெருமையாக இருப்பா.
    இன்னும் நீங்க முன்னெற என் துஆக்காள் இறைவன் உங்க நல்லகுணத்து எல்லாம் நன்மையாகித்தருவான்.

    என்னாமா கவிதயெழுதுறீங்க. இந்தகவிதை எனக்கு ஏக்கதை யேற்படுத்துது குழந்தை இல்லாததுகஷ்டம்னாகயிருந்தாலும் நிச்சயம் உங்க துஆவால் கிடைக்கிக்கும். நானும் உணர்வேன் இதருணத்தை..

    என்றும் தோழியாகவேயிருக்கும்
    பிரோஷாபாத்திமா..//

    வாங்க பாத்திமா எப்படியிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் தாங்களீன் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சியமாக தோழியாக இருப்போம் இறைவனின் நாட்டத்துடன்..

    பதிலளிநீக்கு
  21. அஹமது இர்ஷாத் கூறியது...
    தாய்மையின் வெளிப்பாடு...அருமை

    மிக்க நன்றி இர்ஷாத்

    18 ஜூலை, 2010 9:31 am


    பிரோஷாபாத்திமா கூறியது...
    Vijiskitchen சொன்னது…
    மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.
    அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
    அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//



    17 ஜூலை, 2010 6:04 am //

    மலிக்கா இன்றுதான் இதைபடித்தேன்பா எவ்வளவுதந்தோஷமாக இருக்குதெரியுமா.
    உங்கள்கூட தோழியானதுக்கு பெருமையாக இருப்பா.
    இன்னும் நீங்க முன்னெற என் துஆக்காள் இறைவன் உங்க நல்லகுணத்து எல்லாம் நன்மையாகித்தருவான்.

    என்னாமா கவிதயெழுதுறீங்க. இந்தகவிதை எனக்கு ஏக்கதை யேற்படுத்துது குழந்தை இல்லாததுகஷ்டம்னாகயிருந்தாலும் நிச்சயம் உங்க துஆவால் கிடைக்கிக்கும். நானும் உணர்வேன் இதருணத்தை..

    என்றும் தோழியாகவேயிருக்கும்
    பிரோஷாபாத்திமா..//

    வாங்க பாத்திமா எப்படியிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் தாங்களீன் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சியமாக தோழியாக இருப்போம் இறைவனின் நாட்டத்துடன்..

    பதிலளிநீக்கு
  22. வெறும்பய கூறியது...
    தாய்மையின் வெளிப்பாடு கவிதையாக...

    அருமை
    ..//

    மிக்க நன்றி வெறும்பய.. அச்சோ பேரமாற்றுங்களேன்.

    சே.குமார் கூறியது...
    தாய்மையின் வெளிப்பாடு கவிதையாக..!

    அருமையான கவிதை//


    மிக்க நன்றி குமார்.


    //கவிமணி கூறியது...
    சூப்பர் கவிதை அப்படியே குழந்தைகைகளில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீங்கம்மல்லி.

    எக்ஸலண்ட். சூப்பர்....//

    வாங்க கவி
    மிக்க நன்றி கவிமணி..

    18 ஜூலை, 2010 10:28 pm


    சே.குமார் கூறியது...
    ennakkaa...

    namma valaippakkamey kanom...

    http://www.vayalaan.blogspot.com
    //

    அதான் வந்துட்டு வந்தோமுல்ல..கொஞ்சம் வேலை அதான் அடிக்கடி வரமுடியவில்லை குமார் தவராக எடுக்கவேண்டாம்..

    பதிலளிநீக்கு
  23. காஞ்சி முரளி கூறியது...
    கவிதை தலைப்பே அற்புதம் மலிக்கா...
    தெய்வீகமாய் போற்றப்படும் "தாய்மை" கவிதை அருமை....//

    நன்றியோ நன்றி முரளி..

    ///இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
    இமைக்கவிடாது செய்கின்றாய்///
    ///உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
    உச்சிகுளிர வைக்கின்றாய்-என்////

    இறுக்கியும்... இமைத்தும்... உச்சி முகர்ந்தும்.. உச்சிகுளிரவும் மிகமிக மகிழ்ச்சியின் உச்ச வரிகள்....//

    அப்படியா சந்தோஷம் எழுதும்போது உச்சிக்குளிர்ந்ததுபோலிருந்தது.

    ///கருவறையில் இருந்தவரை
    காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
    கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
    கண்மணியே என் காலம்வரை.///

    நல்ல வரிகள்...
    சுகமான சுமைதான்... சரி... ஏற்றுக்கொள்கிறேன்...

    நாளை...

    தன்னை
    சுகமான சுமையாய்
    சுமந்தவளை... - பெருஞ்
    சுமையாய் கருதி...
    'முதியோர் இல்லத்தில்' தள்ளிவிடும் பதுமைகள்...//

    காலத்தில் கோலத்தில் வழிமாறும் சில பயணங்கள்போல் இதுவும் அங்காங்கே நடக்கிறது
    நம் நிலை என்னெவென்று இறைவன்தானறிவான். ஆனாலும் நம்வளர்க்கும் வளர்ப்பிலும் இருக்கிறதல்லவா. நாம் எதை செய்கிறோமோ அதுவே நமக்கு..சிலவேலை அதற்கெதிராக அதை ஒன்றும் செய்யமுடியாது

    anyhave...
    நல்ல... அழகான... அருமையான கவிதை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    மிக்க நன்றி சகோதரா எதார்த்தத்தையும் எடுத்துக்காட்டிவிட்டீகள் சபாஷ்..




    //mkrpost கூறியது...
    அருமை பற்றி சொல்லும் க்விதை.பாரட்டுக்கள்.

    மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  24. ஜெய்லானி கூறியது...
    கவிதையை படித்ததும் குழந்தையை தூக்கிய உணர்வு ..!!!

    சந்தோஷம் அண்ணாத்தே..
    18 ஜூலை, 2010 12:20 pm

    //kavisiva கூறியது...
    அருமையான வரிகள் மலிக்கா.
    ஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் இன்னும் தாயாகவில்லையென்றாலும் நானும் தாய்மையை உணர்ந்தேன். நன்றி மலிக்கா.

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் கவிசிவா. கூடிய விரைவில் அந்தபாக்கியம் கிடைக்கும் நீங்கலூம் எழுதுவீங்க அந்த உணர்வை..

    பதிலளிநீக்கு
  25. Yasir கூறியது...
    நாலாவது குழந்தை வேண்டாம் என்று இருந்தேன்....இப்படி ஒரு கவிதையை எழுதி ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள் :)..பார்க்கலாம்....அருமையான கவிதை மலிக்கா
    //

    ஓ அப்படியா!
    மிக்க நன்றி யாசிர்காக்கா.

    பதிலளிநீக்கு
  26. தனி காட்டு ராஜா கூறியது...
    பொதுவாக பேனாவில் மை ஊற்றி கவிதை எழுதுவார்கள் ...நீங்கள் உணர்வை ஊற்றுகிறீர்களே எப்படி!

    எல்லாம் தங்களைப்போன்றவர்களின் ஊக்கம்தான் ஒருமனிதனுக்கு ஆதரவும் ஊக்கம்தர ஆளிருந்தால் எதையும் சாதிபானாம்.
    ஏதோ சும்மா கிறுக்குவதைக்கூட கவிதையாக நினைத்து ஊக்கம்தரும்பொது இன்னும் எழுதனும் இதைவிட சிறப்பாக எனஎண்ணம் ஓடுகிறது ராஜா. அதான் இப்படியெல்லாம்..

    வருகைக்கும் ஊக்கமாக கருத்துக்கும் மிக்க நன்றி..ராஜா......

    பதிலளிநீக்கு
  27. Kavianban KALAM, Adirampattinam கூறியது...
    அன்பானத் தங்கை மலிக்கா
    நீராட வந்து விட்டேன்
    நீ எழுதியுள்ள கவிதையும்
    நான் என் பெயரனை பற்றி
    எழுதிய கவிதையும் ஒரே "உணர்வை' தருகின்றதே...
    "ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் முகம் பார்க்கும் கண்ணாடி "
    நான் "முகம்' என்ற தலைப்பில் முகநூலில் எழுதிய வரிகள்
    நிதர்சனம்; அதுவே இக்கவிதைக்கான என் விமர்சனம்

    எனது கவிதைகள் இந்த நீரோடையில் நீந்தலாமா?//

    வாங்க காக்கா வாங்க தங்களின் வருகை நல்வரவாகட்டும்.

    கவிஞரான நீங்கள் இந்த கிறுக்களை காணவந்ததமைக்கு மிக்க நன்றி.

    தாராளமாக நீந்தட்டும் நீரோடையில் அனைவரின் கவிதைகளும்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது