நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எங்கே[ணி]நீ




உன்பின்னே ஒளிந்து
ஒப்பீ விளையாடிய
நாட்களும்

உன் குளிர்நீரருந்தி
குதூகளித்த
நாட்களும்

உன்னுள் குதித்து
குளித்தாடிய
நாட்களும்

நாட்குறிப்புகளில் மட்டும்
பத்திரமாய்
அசலைத்தொலைத்த
நகலாய்..
---------------------------

உனது பரிட்சத்தை
எட்டி நின்றும்
ஏக்கத்துடனும் 
பார்த்ததுண்டு

கயிறுதொட்டு
வாளியிறக்கி
தண்ணீர்மொண்டு
குடம் நிரப்பியத்தில்லை

ஆனால்
என் குழந்தைக்கு
அந்த
பரிட்சயம்கூடயில்லை.

---------------------------------------------

உன்
நீரெடுத்து  நீராடி
உணவு சமைத்து
உண்டோரெல்லாம்
உடலாரோக்கியத்தின்
மடியில்

மின்சார நீரருந்தி
மாசு நீரில் சமைத்து
உணவுண்போரெல்லாம்
மருந்து மாத்திரைகளின்
பிடியில்.
---------------------------------

இன்றும் சில
இடங்களில்
நீ”ர்”
ஊற்றெடுக்கிறாய்
தாய்பாலாகவல்ல
புட்டிப்பாலாக!
அதாவது
தன்னாலல்ல- மோட்டர்
தடியாலடித்து
----------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரணத்தின் விளிம்பில்,




விதி முடியும் தருமிது
வாழ்க்கை வாழ நேரமில்லை
சதிராட்டம் ஆடியதெல்லாம்
சக்தியை தருவதில்லை
செய்தவைகள் கண்முன்னே
சுழல் காட்சிகளாய்
சுழன்றுவர
மாட்சிபெற கைகுப்பி
மண்டியிட்டு கேட்டாலும்
மரணமது விடுவதில்லை
மண்ணில்
மறுவாழ்க்கை வாழ
வழி தருவதில்லை
சதியென்ற போதினிலும்
விதியென்ற போதினிலும்
மரணம்வென்ற மதியில்லை
மரணமில்லாத ஜீவன்களில்லை
உலகில் உள்ள அத்தனைக்கும்
இங்கேயேயிருக்க அனுமதில்லை
இவ்வுலகமும் நிரந்தரமில்லை.
 ------------------------------------------

அகோர மரணம்
ஆபாச மரணம்
நடுவழியில் மரணம்
நாதியத்த மரணம்
இவையணைத்துமில்லா
இலகுவான மரணம்
எனைத்தழுவ வேண்டி
இருகண்கள் மூடி
இறைவனிடம் வேண்டி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது