நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

கொடூரத்தின் விளிம்பில்!



மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!

தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி கழுக்கைகண்டு

பிஞ்சுள்ளம் அஞ்சவில்லை
தன்னை 

பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு முன்னால்!

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாடம்சொல்லும் புகைப்படங்கள்!

புகைப்படங்களின்மேல் கிளிக்கவும்.


எழுதத் தூண்டிய  முகநூல் சகோ றாபி அவர்களுக்கு நன்றி!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது