நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுயம் நலன் [சுயநலம்]




ஓடுடைந்து கவிச்சடிக்கும் முட்டையாய்
ஒட்டி உறிஞ்சும் அட்டையாய்
சுயமிழக்க முடியுமோ
சுயநலமது சுயத்தினை போக்குமோ..

சுயமிழக்க
நெருங்கும் தருணம்
சுயம் காக்க முனையுமெந்தன்
சுயநலம்...

சுயம் பேணத்தவறும் -பிறர்
சுயத்திலென்
சுயமிழக்க விரும்பா
சுயநலம்..

தன்நலம் காத்து
பொதுநலம் சிறக்க
என்நலன் தேக்குமென்
சுயநலம்..

சூடு சொரணையற்று
சுடுசொற்கள் பட்டு
மண்புழுவாய் சுருழ
மதிமறுக்குமென் சுயநலம்..

குட்டக் குட்டகுனிந்து- இனியும்
குனிய முடியா நிலையில்
கட்டவிழ்த்து
குட்டுமென் சுயநலம்..

இல்லாமை நெறுக்கி
இன்னலிடும் போது
பொல்லாமை நீக்க
பொசுக்கென பாயுமென் சுயநலம்..

சுயநலக்காரியென
சுட்டிக்காட்டுவதை
சுண்டித்தள்ளுகிறேன்

சுயம் தேடும் பறவையாகாது
சொறியக்கொடுக்கும் மாடாய்
செல்லவிரும்பாததால்...

=============================================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எங்கே சென்றன?...



பனிப்படர்ந்த முன்னிரவில்
நிலவுக்குளியலில் உடல்நனைத்து
இதய முந்தானையில் தலைத்துவட்டியபோது
தீண்டிய விரலின் ஸ்பரிசம்
இருளண்டிய இரவிற்கு
தீபஉணவளித்து நெகிழ்ந்தவை...

காலின் கட்டைவிரலில் நெட்டியிழுத்து
காற்றசைவில்
காதறுகே நெளிந்த கார்குழல் நீவி,,
தாடை நிமிர்த்தி வெட்கத்தாட்பாழ் நீக்கி
அன்பின் ஒளியை அமாவசையில் கண்டவை..

கண்ணாடிப் பேழைக்குமுன் நின்று
கண்முன் தோன்றியதெல்லாம்
கர்ப்பகிரகதிற்க்குள் நுழைத்து திழைத்து
கண்குளிர்யோடு
மனக்குளிர்ச்சியடந்து குழைந்தவை..

உணர்சிகளால் உடன்படா
உணர்வுகளால் உடன்பட்டு
இரண்டோடொன்று கலந்து கரைந்து
இங்கிருந்தும் அங்கிருந்தும்
இரவும் பகலுமாய் களித்தவை...

எங்கே சென்றன?

கடந்த காலத்திற்காக
கடல்கடந்த கானகத்திற்கா?
கவனக்குறைவால்
காதலற்ற திக்கிற்கா?

காற்றசைகிறது, கானம் கேட்கிறது,
நிலவு ஒளிர்கிறது, இரவு தேய்கிறது
விரல்களோடு மனதும் விம்மியபடி
ரசம்கொட்டிய கண்ணாடி முன்
ரகசியமாய் குமைகிறது,,,

அர்த்தமுள்ளவையாய் தோன்றிய
அந்த நாட்களின்
அழுத்தங்களையெண்ணி....
.....................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எரியும் மனசு...




எரியும் மனசு...
-------------------------

அணைந்துபோன பெருங் கங்குகளில் 
புகைந்து கொண்டிருக்கும் சிறு நெருப்பாய்
எரியும் மனசோடு சிறு விவாதம்..

பெண்மைகளின் கூடாரம்
போராட்டக் களத்தால் நிரப்பட்டவை!
போராட்டக் காரர்களால் சூழப்பட்டவை!
போராளிகளை உருவாக்குபவை!

பெண் கருவென தெரிந்ததும்
கருவில் கொலை, கள்ளிப்பால் கொலை
கழுத்து நெறித்துக் கொலை செய்வ[த]தும் கூட  
கருணைக்கொலையில் சேர்க்கப்பட்டதோ!

கருவைவிட்டு வெளியேறிய நொடிமுதல்
காணும் கேட்குமிடமெங்கிலும், காட்டுப்பூவென
கசக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும்
காவுகொள்ள[ல்ல]ப்படுவதும் கவனமற்றுக் கிடக்கிறதே?

அக்கினிப் பரிட்சைகளாம்  ஆங்காங்கே
அ யோக்கியர்களால்!
சீதையாயிவளென 
சிதை மூட்டி வதைகூட்டும் சித்ரவதையால்
தினம் எரியும் உணர்வோடும்...

பாசம் வைத்த பாவத்திற்கு பரிசாய்
பத்தினியற்றவளென்ற சாபமும்,,,
பாஞ்சாலியென நினைத்து படையெடுக்கும்
பாவக்காரர்களின் கோரமும் அன்றாடம் பார்த்து
தினம் எரியும் மனசோடும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே 
இந் நிலைதொடரும் அவலங்கள் நடந்தேறுகையில்
அணையாது எரிகிறதே- எரிமலை கு[பி]ளம்பாய் 
அகம்புறமெங்கும் ப[சு]ற்றியே!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது