பார்வையற்றோரின் புலம்பல்
என்னைப்போலவே
என் தெருவிளக்கும்
எனக்கு கண்ணிருந்தும் ஒளியில்லை
அதற்கு,,,
விளக்கிருந்தும் ஒளியில்லை..
சூக்களே!
உங்களுக்கும் அரசாளும்
எண்ணம் வந்துவிட்டதோ
அடிக்கடி அரியாசனத்தை
நோக்கியே போகிறீர்களே...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வசமானது மனது
செவியை சிறைப்படுத்தியதுபோல்
சில்லென்றகாற்று செந்தூரமேனியை
சிலிர்ப்பாய் தழுவியதுபோல்
தேன்துளிகள் தெளித்து செவ்வகஇதழை
நனைத்ததுபோல்
சிறைபிடித்த கைகளுக்குள்
சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்
மயக்கம்தந்த விழிகளுக்குள்
மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்
உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய
கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்
வருடிவருடி வார்த்தையால் நீயும்வசபடுத்த
வசம்புக்குழைத்து தேனில் தந்ததுபோல்
வசமாய் காதலும் உன்வசமாகிப்போனது...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
எதுவும் நடக்கலாம்
அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்
காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்
அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்
பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்
அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்
அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி
அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி
அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்
சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்
எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி
எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை
இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
சமையலறையில்
காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்
அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்
பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்
அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்
அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி
அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி
அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்
சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்
எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி
எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை
இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



