நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாலிபவயது


உன்வயதை வீணானவைகளைக்கொண்டு
பாழாக்கிவிடாதே!

உன் பருவம் போனால் திரும்பாது-அது
போகும்முன் புடம்போட்டு வைத்துக்கொள்.

நீ வாலிபத்தில் செய்யும் ஒவ்வொன்றும்
உன் வயோதிகத்தில் உனக்கே திருப்பிவரும்
திரும்பவரும்

வாலிபத்தை வேண்டாத சகவாசத்தினாலும்
வசதியான வாழ்வின் திமிரினாலும்
வீணடித்துவிடாதே!

வாலிபம் உனக்கு கொடுக்கப்பட்டதே
உன்னை சோதித்துப்பார்க்கத்தான்

அதில் நீ எடுத்துவைக்கும் ஒவ்வொருஅடியும்
உன் ஈரூலக வாழ்வையும்
தீர்மானிக்கப்படக்கூடியவைகள்

”ஆதலால் வாலிபமே”

வாலிபவயதின் வாழ்வை
முறையாக்கிக்கொள் அதுவே உன்னை
நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மீண்டும் ஒரு விருது


பாசமுள்ள தோழி மேனகாசத்தியா அவர்கள் வழங்கியவிருது.

மனம் மகிழ்ச்சியில்திழைக்கிறது தோழமைகளின் ஊக்கங்கள் நம்மை
மேலும் மேலும் வலுவடைச்செய்யும், அவ்விதத்தில்
நான் மிகவும்கொடுத்துவைத்தவள்.

மென்மேலும் இந்த ஊக்கத்தை உங்கள் கருத்துக்களின் மூலம் இந்த
தோழமைக்குத்தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வந்துசெல்லும் அனைத்து தோழமைக்களுக்கும்
இவ்விருதினை வழங்குகிறேன்.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அச்சச்சோ



என்ஆடைகளை கலைந்து
என்னை அலங்கோலம்செய்ததால்
ஆத்திரம் அடைந்த நான்!

என் காரத்தையெல்லாம் அகங்காரத்தோடு
கண்ணுக்குள் நுழைத்து தாரை தாரையாய்
கண்ணீரை வரவழைத்து விடுகிறேன்

ஆத்திரமும் கோபமும்
உங்களுக்கு மட்டுமில்லை
எங்களுக்கும் உண்டு என்று
வேதனைபட்டுக்கொண்டே
வெந்தது வெங்காயம் குழம்பில்......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது